முட்டை விலை ரூ.3.10ஒரே நாளில் 23 காசு உயர்வுமுட்டை விலை ரூ.3.10ஒரே நாளில் 23 காசு உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ...
'பறக்குது' பட்டு நூலிழை விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2012
00:24

பரமக்குடி:பட்டு நூலிழை விலை, சில மாதங்களாக, மிகவும் உயர்ந்துள்ளதால், பரமக்குடி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.கைத்தறி நெசவாளர்கள் 'பம்பர்', 'பருத்தி பட்டு' போன்ற ரகங்களை நெய்து வருகின்றனர். இதற்கு பயன்படுத்தும், '2 பிளே' ரக பட்டு நூலிழை, 2012 பிப்ரவரி துவக்கத்தில், கிலோ 2,900 ரூபாய்க்கு விற்ற நிலையில், டிசம்பரில் 3,600 ரூபாய்க்கும், '4 பிளே' ரக பட்டு நூலிழை, 2,400ல் இருந்து 3,100 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது.
கோரா சாதாபாவு 2,100ல் இருந்து 3,000 ரூபாயாகவும், கோரா கெண்டம்பாவு, 2,200ல் இருந்து 3,000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மின்தடை ஒருபுறம் மிரட்டி வரும் நிலையில், சந்தையில் பட்டு சேலைகள் பழைய விலைக்கே விற்கப்படுவதால், நெசவாளர்கள் திணறி வருகின்றனர். விற்பனையும் மிகவும் சரிந்துள்ளது.மேலும், கைத்தறி ரக ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உள்ளதால், விசைத்தறியில் குறைந்த விலைக்கு பட்டு உற்பத்தி செய்து, விற்கும் அவலம் தொடர்கிறது.
பரமக்குடி பட்டு நெசவு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: 2011 ஜனவரியில், 4,000 ரூபாயை தொட்ட, பட்டு நூலிழை விலை, டிசம்பரில் 2,000 ரூபாயாக குறைந்தது.இந்தாண்டு ஜனவரியில் இருந்து, மாதம் 100 ரூபாய் என்ற அளவில், விலை அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த விற்பனையாளர்கள் பட்டு நூலிழைகளை பதுக்கி வருகின்றனர்.
மேலும், நெசவாளர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தில் கச்சாப் பொருட்கள் கிடைக்காமல், வேலையின்றி அலையும் சூழல் உண்டாகிறது.ஆகவே மத்திய, மாநில அரசுகள், 'ஆன் - லைன்' வர்த்தகத்தில் உள்ள பட்டு நூலிழை விற்பனையை மீட்பதுடன், நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)