பதிவு செய்த நாள்
17 டிச2012
12:28
மேட்டுப்பாளையம்:கறிவேப்பிலை விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை உள்ளிட்ட, பகுதிகளை சேர்ந்த, 20 கிராமங்களில், 500 முதல், 600 ஏக்கரில், கறிவேப்பிலை பயிரிடப்படுகிறது.இப்பகுதிகளில் இருந்து, மேட்டுப்பாளையம் - அன்னூர் ரோடு, தேரம்பாளையத்தில் உள்ள மார்க்கெட்டுக்கு இவை, கொண்டுசெல்லப்படுகின்றன. அங்கிருந்து மாநிலத்தின் பிற, பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்துக்கு, தினமும் கறிவேப்பிலை அனுப்பப்படுகிறது.
கேரளாவில், கறிவேப்பிலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளதால், அங்கு அதிகளவில், கறிவேப்பிலை அனுப்பப்பட்டு வருகிறது.கடந்த மாதம், ஒரு கிலோ கறிவேப்பிலை, 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது தேரம்பாளையம் மார்க்கெட்டில், ஒரு கிலோ கறிவேப்பிலை, 20 ரூபாய் முதல், 25 ரூபாய் வரை, விற்பனையாகிறது. விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயி வரதராஜன் கூறியதாவது :மக்கள் தற்போது, இயற்கை உணவு முறைகளை அதிகம் விரும்புவதால், காய்கறிகளுடன், கறிவேப்பிலை தேவையும் அதிகரித்துள்ளது.கேரளாவில் உள்ளது போல், மேட்டுப்பாளையம் பகுதியில், கறிவேப்பிலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை கட்ட, அரசு முன் வரவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|