எச்.பி., நிறுவனத்தின் "மெகா' பிரின்டர் எச்.பி., நிறுவனத்தின் "மெகா' பிரின்டர் ... நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக குறையும் : மத்திய நிதி அமைச்சகம் "பகீர்' தகவல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக குறையும் : மத்திய நிதி அமைச்சகம் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வலைதளம் மூலம் வீட்டு வசதி கடன் : எஸ்.பீ.ஐ., அறிமுகப்படுத்துகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2012
23:39

புதுடில்லி: வீட்டில் இருந்தே வலைதளம் மூலம், சுலபமாக வீட்டு வசதி கடன் பெறும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,) அறிமுகப்படுத்த உள்ளது.இந்த திட்டம் அமலுக்கு வந்தால், வீட்டு வசதி கடன் பெற, வங்கிப் படிக்கட்டுகளில் பலமுறை ஏறி, இறங்கும் அலைச்சல் மட்டுமின்றி, பணம், நேரம் ஆகியவையும் மிச்சமாகும்.வீடு தேடி வரும்எஸ்.பீ.ஐ.,-ன் வலைதளத்தில், வீட்டு வசதி கடனுக்கான விண்ணப்பத்தை வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். கடன் பெற தகுதியான ஆவணங்களை, வங்கியின் விற்பனை பிரதிநிதிகள் வாடிக்கையாளர் வீட்டிற்கே சென்று,பெற்றுக் கொள்வார்கள். வருவாய், அடையாள அட்டை, வசிப்பிட சான்று உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்போது, ஏற்படும் ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள, வல்லுனரின் ஆலோசனையை பெறும் வசதியும், வலைதளத்தில் இருக்கும்.மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளின் விலை விவரம், கட்டுமான நிறுவனங்களின் குடியிருப்பு திட்டங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.கடனுக்கான விண்ணப்பத்தின் போது, வாடிக்கையாளருக்கு பிரத்யேக குறியீடு வழங்கப்படும். இதன் மூலம், அவர் தமது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை, அவ்வப்போது, வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். கடன் விண்ணப்ப பரிசீலனை, நான்கு கட்டங்களாக நடைபெறும். வாடிக்கையாளரின் வருமான வரி கணக்கு எண் (பான் கார்டு), கடன் தகவல் அமைப்பு (சி.ஐ.பீ.,) தரும் வாடிக்கையாளரின் வங்கி கடன் விவரங்கள், கடன் தகுதி ஆவணங்கள், இடர்பாட்டு அம்சங்கள் ஆகியவை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆய்வின் முடிவில், கொள்கை அளவிலான கடன் ஒப்புதல் குறித்து, வாடிக்கையாளருக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும். இத்துடன், வீட்டு வசதி கடன் வழங்கும் வங்கி கிளைகளின் விவரமும் இடம்பெற்றிருக்கும். வாடிக்கையாளர், தமக்கு அருகில் உள்ள வங்கிக் கிளையை தேர்வு செய்து, அங்கு கடன் பெற்றுக் கொள்ளலாம் என, வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வட்டி குறைப்புவீட்டு வசதி கடன் துறையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக, அதிரடி வட்டி குறைப்பு செய்து வருகிறது.இதனால், இவ்வங்கியின் வீட்டு வசதி கடன், சென்ற செப்டம்பர் வரையிலான ஓராண்டில் 13 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.08 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் இறுதி நிலவரப்படி, 95,947 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 30 லட்ச ரூபாய் வரையிலான கடனுக்கு 10 சதவீதமும், 30 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட கடனுக்கு 10.15 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது.இந்திய வீட்டு வசதி கடன் சந்தையில், எஸ்.பீ.ஐ.,-ன் பங்களிப்பு 26 சதவீதமாக உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)