பதிவு செய்த நாள்
17 டிச2012
23:44
புதுடில்லி :நடப்பு ரபி பருவத்தில் (அக்டோபர் - ஏப்ரல்), சென்ற வாரம் வரையிலுமாக, உள்நாட்டில் கோதுமை மற்றும் பருப்பு வகைகள் சாகுபடி பரப்பளவு, 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.கரீப் பருவத்தில், நாட்டின் உணவு தானியங்கள் சாகுபடி பரப்பளவு குறைந்து போனது. இந்நிலையில், நடப்பு ரபி பருவத்தில், சென்ற வாரம் வரையிலுமாக, கோதுமை மற்றும் பருப்பு வகைகள் சாகுபடி பரப்பளவு, 4.82 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, சென்ற பருவத்தின், இதே காலத்தை (4.69 கோடி ஹெக்டேர்) விட, 3 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு காலத்தில், கோதுமை சாகுபடி பரப்பளவு, 2.20 கோடி ஹெக்டேரிலிருந்து, 2.27 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் சாகுபடி பரப்பு, 1.20 கோடி ஹெக்டேரிலிருந்து, 1.21 கோடி ஹெக்டேராக சற்று அதிகரித்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பு, 74 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 79 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.இதர தானியங்கள் பரப்பளவு, 52 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 53 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. அதேசமயம், நெல் சாகுபடி பரப்பளவு, 1.95 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 1.42 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|