எச்.பி., நிறுவனத்தின் "மெகா' பிரின்டர் எச்.பி., நிறுவனத்தின் "மெகா' பிரின்டர் ... பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் சரிவு நிலை பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் சரிவு நிலை ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக குறையும் : மத்திய நிதி அமைச்சகம் "பகீர்' தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2012
23:50

புதுடில்லி :நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7-5.9 சதவீத அளவிற்கு குறையும் என, மத்திய அரசு மறுமதிப்பீடு செய்துள்ளது.இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 6.5 சதவீதமாக இருந்தது.நிதி அமைச்சகம் சார்பில், நடப்பு நிதியாண்டின், இடைக்கால பொருளாதார ஆய்வறிக்கை நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவரம் வருமாறு:மந்த நிலைசர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. முதலீடுகளை கவரும் வகையில், அண்மையில், பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), நிதி பற்றாக்குறை, 5.3 சதவீதம் என்ற அளவில் இருக்கும். மார்ச் மாத இறுதியில், பணவீக்கம், 6.8 - 7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சேவை துறைநடப்பு ரபி பருவத்தில், உணவு தானியங்கள் உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சேவைகள் துறையின் செயல்பாடும் நன்கு வளர்ச்சி காணும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், நாட்டின் பொருளாதாரம், 5.4 சதவீதம் என்ற அளவில் குறைந்த வளர்ச்சியை கண்டுள்ளது.இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 7.3 சதவீதமாக உயர்ந்திருந்தது.கடந்த ஒன்பது ஆண்டுகளில், இல்லாத அளவிற்கு, சென்ற நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.5 சதவீதமாக குறைந்திருந்தது.சென்ற நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நிதிக் கொள்கையில் கடும் கட்டுப்பாடும், கடன் செலவினம் அதிகரிப்பும், முதலீடுகள் குறைய காரணமாக அமைந்தன.வரி வசூல்சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், நாட்டின் நேரடி வரி வசூல் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் கூறியதாவது:நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறை, 5.1 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறைவான வரி வசூல், எரிபொருள், உணவு மானியச் செலவினங்கள் அதிகரிப்பு போன்றவற்றால், நிதி பற்றாக்குறை, 5.3 சதவீதமாக மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கு எட்டப்படும்.நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டை விட, இரண்டாவது அரையாண்டில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.தற்போது, ஜி.டீ.பி.,யில், தனிநபர் வருமானம் சராசரியாக, 1,600 டாலர் என்ற அளவில் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8-9 சதவீதம் என்ற அளவில் இருக்கும் பட்சத்தில், வரும் 2025ம் ஆண்டில், தனிநபர் வருமானம், 10,500 டாலராக உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)