பதிவு செய்த நாள்
18 டிச2012
23:51
ஈரோடு: மஞ்சள் விலையை விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, கடந்த, 13ம் தேதி, இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கம் சார்பில், எம்.பி., கணேச மூர்த்தி தலைமையில், டில்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம், வழங்கப்பட்டது.மாநில அரசுகள் இதையடுத்து, "மஞ்சள் விலையை விவசாயிகளே நிர்ணயிக்க தேவையான உதவிகளை, மத்திய, மாநில அரசுகள் செய்ய பரிந்துரை செய்யப்படும்' என, ஜனாதிபதி உறுதியளித்ததாக, விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி தெரிவித்தார்.அதன் விவரம்: ஆந்திரா, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 80 சதவீத மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, 30 முதல், 40 டன் மஞ்சள் உற்பத்தியாகிறது.ஆந்திராவில், 41 சதவீதம், தமிழகத்தில், 21 சதவீதம், இதர பகுதிகளான கர்நாடகா, மகாராஷ்டிராவில், ஏழு சதவீதம் மஞ்சள் உற்பத்தியாகிறது. ஆந்திரா - நிஜாமாபாத், தமிழகம் - ஈரோடு, மகாராஷ்டிரா - சாங்லி ஆகிய மூன்று பெரிய மஞ்சள் சந்தைகள் உள்ளன.கடந்த, 2010 டிசம்பரில், மஞ்சள் குவிண்டால், 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது, நடப்பு 2012, ஜனவரியில், 2,500 ரூபாயாக குறைந்துள்ளது.உற்பத்தி செலவுஒரு ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு, ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 605 ரூபாய் செலவாகிறது. இதில், 20 குவிண்டால் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்படி, குவிண்டாலுக்கு, 8,700 ரூபாய் உற்பத்தி செலவாகிறது.மத்திய அரசு, 4,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அதேபோல், கர்நாடகாவில், 5,000 ரூபாய்க்கு கொள்முதலாகிறது. தமிழக அரசும், மத்திய அரசு அறிவித்த விலைக்கு கொள்முதல் செய்வதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.இந்தியாவில் விளைபொருட்களில், மிளகாய் அதிக அளவில் அன்னியச் செலவாணியை ஈட்டி தருகிறது. அடுத்தப்படியாக மஞ்சள் உள்ளது. ஆனால், விவசாயிகள் மஞ்சள் இருப்பு வைக்க இடவசதி, பொருளாதார வசதி இன்றி, விற்கும் நிலையில் உள்ளனர்.வங்கி கடன்வங்கியில் குறைந்த வட்டியில், வியாபாரிகளுக்கு கடன் வழங்குகின்றனர். விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. விவசாயிகளுக்கு, ஒரு குவிண்டால், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, நபார்டு வங்கி மூலம் வழங்க வேண்டும். மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்வதை தடுக்க வேண்டும். விவசாயிகள் நலன் கருதி, மஞ்சள் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்ய, உதவ வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.பரிந்துரைஇந்திய விவசாயிகள் சங்க தலைவர், தெய்வசிகாமணி கூறியதாவது:மஞ்சள் விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய அரசிடம் பரிந்துரைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். விவசாயிகள் விலை நிர்ணயம் செய்வதை வரவேற்று, அதற்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குவதற்கு பரிந்துரை செய்வதாகவும், ஜனாதிபதி மேலும் கூறினார்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|