டாட்டா குழும வர்த்தக இலக்கு ரூ.25 லட்சம் கோடி:புதிய தலைவர் சாதிப்பாரா?டாட்டா குழும வர்த்தக இலக்கு ரூ.25 லட்சம் கோடி:புதிய தலைவர் சாதிப்பாரா? ... உதிரி பாகங்கள் பற்றாக்குறையால்இறக்குமதியை நாடும் கப்பல் நிறுவனங்கள் உதிரி பாகங்கள் பற்றாக்குறையால்இறக்குமதியை நாடும் கப்பல் நிறுவனங்கள் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
புண்ணாக்கு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்:பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2012
00:20

சேலம்:கால்நடை தீவனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புண்ணாக்கு வகைளை, ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்திஉள்ளது.
செயற்குழு:தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின், மாநில செயற்குழுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.இதையடுத்து, இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் செங்கோட்டு வேல், செய்தியாளர்களிடம் கூறியதாவது:கறவை மாடுகள் வளர்க்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு, தீவன விலையேற்றத்தால், அதிக இழப்பு ஏற்படுகிறது.விவசாயம் பாதிக்கப்பட்டதால், வைக்கோல் உற்பத்தி இல்லை. மேலும், பசுந்தீவன உற்பத்திச் செலவு மற்றும் பணியாளர்கள் கூலி உயர்ந்துள்ளது.
பசும்பால்:இந்நிலையில், 4.3 சதவீத கொழுப்புச் சத்து, 8.2 இதரச் சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பசும்பால் விலையை, 20ல் இருந்து, 25 ரூபாயாகவும், 7 சதவீத கொழுப்புச்சத்து, 8.8 சதவீத இதர சத்துள்ள எருமைப்பாலின் விலையை, 28 ல் இருந்து, 35 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலப்புத் தீவன விலை உயர்வால், மாடு கொடுக்கும் பால் அளவுக்கு ஏற்ப, தீவனம் வழங்க முடியவில்லை.
இதனால், பால் அளவும், பாலின் தரமும் குறைகிறது. தரத்தின் அடிப்படையில், பால் விலை நிர்ணயிக்கப்படுவதால். விலையும் குறைகிறது.
கூட்டுறவு சங்கத்துக்கு, பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு, ஒரு கிலோ கலப்புத் தீவனம், எட்டு ரூபாய்க்கு, மானிய விலையில் வழங்க, அரசு முன்வர வேண்டும்.பால் கூட்டுறவு சங்கங்களுக்கு, உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். கறவை மாடு வளர்க்காமல், பால் உற்பத்தி செய்யாதவர்கள் எல்லாம், பால் கூட்டுறவு சங்கத்தில், 300 லிட்டர் பால் ஊற்றியதாக, தவறான கணக்கை காண்பித்து, உறுப்பினராக சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களை, சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும்.
சத்துணவு:கால்நடைத் தீவனத்தில், முக்கிய பங்கு வகிக்கும் புண்ணாக்கு வகைகளின் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். ஆவின் ஒன்றியப் பகுதிகளில், கால்நடைத் தீவன உற்பத்தி ஆலைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சத்துணவில் பால் வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)