பதிவு செய்த நாள்
20 டிச2012
10:23

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளில் சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்க நேர தெடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.26 புள்ளிகள் குறைந்து 19418.74 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 16.25 புள்ளிகள் குறைந்து 5913.35 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமையன்று நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில், பங்குகளை வாங்கியதையடுத்து, 'சென்செக்ஸ்' குறியீட்டு எண், 0.57 சதவீத ஏற்றத்துடன் முடிவடைந்தது.தர மதிப்பீட்டு நிறுவனமான, ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ், கிரீஸ் நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டை உயர்த்தியது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்றைய பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம், ஆரோக்யபராமரிப்பு, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.54.67ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|