ஏல விற்பனையில் பருத்தி வரத்து அதிகரிப்புஏல விற்பனையில் பருத்தி வரத்து அதிகரிப்பு ... "ஸ்மார்ட் "டிவி' உற்பத்தி20 கோடியாக உயரும் "ஸ்மார்ட் "டிவி' உற்பத்தி20 கோடியாக உயரும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார்கள் விலை உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2012
16:11

உற்பத்தி செலவு அதிகரிப்பு, அன்னிய செலாவணி பரிமாற்றத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு ஆகிய காரணங்களால், மாருதி சுசூகி நிறுவனம் உட்பட, பல்வேறு கார் நிறுவனங்கள், ஜனவரி, 1ம் தேதி முதல், கார்களின் விலையை உயர்த்த உள்ளன. இது குறித்து மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) மயாங்க் பரீக் கூறுகையில்,"மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை செய்யும், பல்வேறு மாடல் கார்களின் விலை உயர்த்தப்படுகிறது. மாடலுக்கு தகுந்தார் போல், விலை உயர்வு இருக்கும். எனினும், மிக அதிகபட்சமாக, ரூ.20,000 வரை, விலை உயர்வு இருக்கும். அன்னிய செலாவணி பரிமாற்றத்தில் காணப்படும், ஏற்றத்தாழ்வு தான், விலை உயர்வுக்கு காரணம்,'' என்றார். மாருதி சுசூகி நிறுவனம், "மாருதி800' மாடல் காரில் இருந்து, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, விற்பனை செய்யப்படும் "கிஸாஷி' வரை, பல்வேறு மாடல் கார்களை, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் கார்களின், எக்ஸ்ஷோரூம், டில்லி, விலை ரூ.2.09 லட்சத்தில் இருந்து, ரூ.17.52 லட்சம் வரை உள்ளது. இதேபோல டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும், ஜனவரி, 1ம் தேதி முதல், தங்களது மாடல் கார்களின் விலையில், 1 முதல் 2 சதவீதம் வரை, உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம், "எதியோஸ் லிவா' முதல், வெளி
நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும், "லேண்ட் குரூஸர்' வரை, பல மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களின் எக்ஸ்ஷோரூம், டில்லி, விலை, ரூ.4.44 லட்சத்தில் இருந்து, ரூ.99.27 லட்சம் வரை உள்ளது. மாருதி,டொயோட்டா நிறுவனங்களை தொடர்ந்து, ஹோண்டா கார்ஸ் நிறுவனமும், வோக்ஸ்வாகன் நிறுவனமும், கார்களின் விலையை உயர்த்தும் திட்டம் உள்ளது என்று தெரிவித்துள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விலை, 1 சதவீதத்திலிருந்து, 3 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது என, அந்நிறுவனத்தின், துணை தலைவர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)