பதிவு செய்த நாள்
21 டிச2012
00:20
புதுடில்லி:நாட்டின் கடுகு உற்பத்தி, நடப்பு 2012-13ம் ரபி பருவத்தில், 65 லட்சம் டன்னாக அதிகரிக்கும். இது, கடந்த 2011-12ம் ரபி பருவத்தில், 59 லட்சம் டன்னாக இருந்தது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில், கடுகு விளைச்சலுக்கு ஏற்ற, தட்பவெப்ப நிலை காணப்படுவதால், இதன் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக, எஸ்.இ.ஏ., தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு பருவத்தில், கடுகு பயிரிடும் பரப்பளவு, 2 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து, 63.6 லட்சம் ஹெக்டேராக உயர்ந்து உள்ளது.இது தவிர, சூரியகாந்தி பயிரிடும் பரப்பளவு, இரண்டு மடங்கு அதிகரித்து, 3.2 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 6.6 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து உள்ளது. மேலும், நிலக்கடலை பயிரிடும் பரப்பளவும், 50 ஆயிரம் ஹெக்டேர் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த சமையல் எண்ணெய் பயன்பாடு, 167 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இதில், வனஸ்பதியின் பங்களிப்பு 6.5 சதவீதம் (11 லட்சம் டன்) என்ற அளவில் உள்ளது. இதே போன்று, பாமாயிலின் பங்களிப்பு, 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது என, எஸ்.இ.ஏ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|