பதிவு செய்த நாள்
21 டிச2012
00:21
புதுடில்லி:நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், உள்நாட்டில் விமான பயணம் செய்தோர் எண்ணிக்கை, 50.20 லட்சம் என்ற அளவில் குறைந்துள்ளது.இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில் பயணம் செய்தோர் எண்ணிக்கையை (54.14 லட்சம் பேர்) விட, 8 சதவீதம் குறைவாகும் என, உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
சென்ற நவம்பர் மாதத்தில், உள்நாட்டில், விமான பயணத்திற்கான தேவை குறைந்து போனது. இதனால், விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்கள், அவற்றின் சேவைகளை குறைத்து கொண்டன.சென்ற நவம்பர் மாதத்தில், குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கி வரும், இண்டிகோ நிறுவனத்தில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, 13.69 லட்சம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, ஏர்-இந்தியா (10.38 லட்சம் பேர்), ஜெட் ஏர்வேஸ் (9.17 லட்சம் பேர்), கோ ஏர் (3.73 லட்சம் பேர்), ஜெட் லைட் (3.45 லட்சம் பேர்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.நடப்பாண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், விமான பயணம் செய்தோர் எண்ணிக்கை, 5.34 கோடியாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தில் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கையை (5.50 கோடி பேர்) விட, 2.94 சதவீதம் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|