பதிவு செய்த நாள்
21 டிச2012
00:22
கொச்சி:நடப்பு நிதியாண்டில், நவம்பருடன் நிறைவடைந்த எட்டு மாத காலத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் இறக்குமதி, 32 சதவீதம் உயர்ந்துள்ளதாக,
கொச்சியை சேர்ந்த ரப்பர் வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.உள்நாட்டில், இயற்கை ரப்பர் உற்பத்தி குறைந்துள்ளது. அதேசமயம், சர்வதேச சந்தையில், குறிப்பாக, தாய்லாந்தின் பேங்காக் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூர் சந்தைகளில், இதன் விலை குறைவாக உள்ளது. இதனால், இந்திய வர்த்தகர்கள், அதிக அளவில் இயற்கை ரப்பரை இறக்குமதி செய்து வருகின்றனர்.
உலகில், இயற்கை ரப்பர் பயன்பாடு மற்றும் இறக்குமதியில், சீனா முதலிடத்தில் உள்ளது. பொருளாதார சுணக்க நிலையால், இயற்கை ரப்பருக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், நடப்பாண்டில், சீனாவில் இதன் பயன்பாடு, 15-20 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், இயற்கை ரப்பர் இறக்குமதி, 1.53 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை (1.15 லட்சம் டன்) விட, 32.5 சதவீதம் அதிகமாகும்.சென்ற நவம்பர் மாதத்தில், இதன் இறக்குமதி, 16,125 டன்னிலிருந்து, 22,748 டன்னாக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|