பதிவு செய்த நாள்
21 டிச2012
00:27
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, "சென்செக்ஸ்' குறியீட்டு எண், 0.11 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.மேலும், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே நடைபெற்றது.
இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்றைய வர்த்தகத்தில், மோட்டார் வாகனம், மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போயின. இருப்பினும், உலோகம், நுகர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 22.08 புள்ளிகள் சரிவடைந்து, 19,453.92 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,520.51 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,335.72 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஹிண்டால்கோ, டாட்டா ஸ்டீல், சிப்லா உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 13.20 புள்ளிகள் குறைந்து, 5,916.40 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,937.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,881.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|