தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு ... "பிரின்டர்' விற்பனை7.61 லட்சமாக குறைந்தது "பிரின்டர்' விற்பனை7.61 லட்சமாக குறைந்தது ...
அன்னிய நிறுவனங்களின் முதலீடு ரூ.1.27 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2012
00:31

மும்பை:நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், இதுவரையிலுமாக, இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த முதலீடு, 2,300 கோடி டாலரை (1.27 லட்சம் கோடி ரூபாய் )தாண்டியுள்ளது.
இரண்டாவது முறை:கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு, நடப்பாண்டில் தான், இது போன்ற மிகப் பெரிய அளவி லான முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து, கடந்த 14 ஆண்டுகளில், இரண்டாவது முறை யாக, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது.மந்தநிலையில் உள்ள இந்திய பொருளா தாரத்தை, வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கோடு, பல்வேறு சீர்திருத்த திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்துடன், மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இத்தகைய நடவடிக்கைகளால், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, கடந்த சில மாதங்களாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டு வருகின்றன.
ஆசிய நாடுகள்:குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 400 கோடி டாலருக்கும், அதிகமாக முதலீடு மேற் கொள்ளப்பட்டுள்ளது.மேலும், நடப்பாண்டில், இதர ஆசிய நாடுகளை விட, அன்னிய நிதி நிறுவனங்களின் முத லீடுகளை அதிக அளவு ஈர்த்ததில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.இரண்டாவது இடத்தில் தென்கொரியா (1,440 கோடி டாலர்) உள்ளது. அடுத்த இடங்களில் ஜப்பான் (1,600 கோடி டாலர்), தைவான் (470 கோடி டாலர்) மற்றும் பிலிப்பைன்ஸ் (250 கோடி டாலர்) ஆகியவை உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)