பதிவு செய்த நாள்
22 டிச2012
00:31
மும்பை:நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், இதுவரையிலுமாக, இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த முதலீடு, 2,300 கோடி டாலரை (1.27 லட்சம் கோடி ரூபாய் )தாண்டியுள்ளது.
இரண்டாவது முறை:கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு, நடப்பாண்டில் தான், இது போன்ற மிகப் பெரிய அளவி லான முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து, கடந்த 14 ஆண்டுகளில், இரண்டாவது முறை யாக, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது.மந்தநிலையில் உள்ள இந்திய பொருளா தாரத்தை, வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கோடு, பல்வேறு சீர்திருத்த திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்துடன், மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இத்தகைய நடவடிக்கைகளால், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, கடந்த சில மாதங்களாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டு வருகின்றன.
ஆசிய நாடுகள்:குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 400 கோடி டாலருக்கும், அதிகமாக முதலீடு மேற் கொள்ளப்பட்டுள்ளது.மேலும், நடப்பாண்டில், இதர ஆசிய நாடுகளை விட, அன்னிய நிதி நிறுவனங்களின் முத லீடுகளை அதிக அளவு ஈர்த்ததில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.இரண்டாவது இடத்தில் தென்கொரியா (1,440 கோடி டாலர்) உள்ளது. அடுத்த இடங்களில் ஜப்பான் (1,600 கோடி டாலர்), தைவான் (470 கோடி டாலர்) மற்றும் பிலிப்பைன்ஸ் (250 கோடி டாலர்) ஆகியவை உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|