பதிவு செய்த நாள்
22 டிச2012
00:33
மும்பை: ஆடி இந்தியா நிறுவனம், சொகுசு கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந் நிறுவ னம், அதன் அனைத்து மாடல் கார்களின் விலையை, 5 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித் துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் பெர்ஸ்கி கூறியதாவது:
மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு வீழ்ச்சி போன்றவற்றால், நிறுவனத்தின் கார் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக, நிறுவனத்தின், பல் வேறு மாடல் கார்களின் விலையை, 5 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, வரும் 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
நடப்பு 2012ம் ஆண்டில், இந்தியாவில், 8,000 கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை விஞ்சும் வகையில் விற்பனை இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும், நிறுவனத்தின் கார் விற்பனை, 76 சதவீதம் வளர்ச்சி கண்டு, 850 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு மைக்கேல் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|