பதிவு செய்த நாள்
22 டிச2012
00:34
மும்பை:நடப்பு 2012ம் ஆண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இங்க் ஜெட், லேசர் உள்ளிட்ட கம்ப்யூட்டர் பிரின்டர்களின் விற்பனை, 7.61 லட்சமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 4.7 சதவீதம் குறைவாகும் என, ஆலோசனை நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது.
இருப்பினும், மதிப்பின் அடிப்படையில், பிரின்டர்களின் விற்பனை, 31 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24.65 கோடி டாலராக (1,356 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், பிரின்டர்கள் விற்பனையில், 51 சதவீத பங்களிப்பை கொண்டு, எச்.பி., நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, கேனன் (23 சதவீதம்), எப்சன் (9 சதவீதம்) மற்றும் சாம்சங் (8 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.பண்டிகை காலத்தில், எதிர்பார்ப்பிற்கு மாறாக, பல்வேறு பிரின்டர்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|