பதிவு செய்த நாள்
22 டிச2012
00:35
புதுடில்லி:இந்தியாவில், பெட்ரோல் பயன்பாட்டில், தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக, பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.உள்நாட்டில், மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடும் உயர்ந்து உள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவாக இருப்பதால், இறக்குமதி வாயிலாகவே, 80 சதவீத தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின், பெட்ரோல் பயன்பாடு, 1.50 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இதில், மகாராஷ்டிர மாநிலம், 21 லட்சம் டன் பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, தமிழகம் (14.70 லட்சம் டன்), உத்தர பிரேதசம் (13.73 லட்சம் டன்), ஆந்திரா (11.68 லட்சம் டன்), குஜராத் (10.49 லட் சம்), கர்நாடகா (10.45 லட்சம் டன்), டில்லி (8.12 லட்சம் டன்), கேரளா (7.87 லட்சம் டன்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|