"பிரின்டர்' விற்பனை7.61 லட்சமாக குறைந்தது"பிரின்டர்' விற்பனை7.61 லட்சமாக குறைந்தது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஈரானின் கச்சா எண்ணெயை குறைக்க இந்தியா திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2012
00:38

புதுடில்லி:வரும் நிதியாண்டில், ஈரானில் இருந்து, 10-15 சதவீத அளவிற்கு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொருளாதார தடை:அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளன.இதையடுத்து, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் குறைத்துக் கொண்டன.இதனால், ஈரானுக்கு, மாதந்தோறும், 500 கோடி டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.அதேசமயம், ஈரான் மீதான தடை காரணமாக, டாலர் அடிப்படையில் குறுகிய கால கடன் வழங்க வங்கிகள் மறுக்கின்றன.
இறக்குமதி செலவினம்:இதனால், உள்நாட்டில், அதிக வட்டியில் கடன் பெறும் நிலை, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் உயர்ந்துள்ளது. இதை யடுத்து, ஈரான் கச்சா எண்ணெய் விலையை குறைக்காவிட்டால், வரும் நிதியாண்டில், அந்நாட்டிலிருந்து மேற் கொள்ளப்படும், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்படும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகளவில், கச்சா எண்ணெய் இறக்குமதியில், இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. கச்சா எண்ணெயை பொறுத்தவரை, இந்தியா, 80 சதவீதம் இறக்குமதியை நம்பி உள்ளது.
அமெரிக்கா:இதன்படி, நாள்தோறும், 35 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா எதிர்நோக்கி உள்ளது.இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில், சவுதி அரேபியாவை அடுத்து, இரண்டாவது இடத்தில் ஈரான் உள்ளது.அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்டன. நடப்பு நிதியாண்டில் ஈரான் கச்சா எண்ணெயை, இறக்குமதி செய்வதை இந்தியா 15 சதவீதம் குறைத்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)