தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு ... வங்கிகளின் வீட்டு வசதி கடன் ரூ.1.70 லட்சம் கோடியாக உயரும் வங்கிகளின் வீட்டு வசதி கடன் ரூ.1.70 லட்சம் கோடியாக உயரும் ...
அன்னிய நேரடி முதலீடு ரூ.10,670 கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2012
23:48

புதுடில்லி:சென்ற அக்டோபர் மாதம், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 65 சதவீதம் வளர்ச்சி கண்டு, 194 கோடி டாலராக (10,670 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டு, அக்டோபரில் 116 கோடி டாலராக (6,380 கோடி ரூபாய்) இருந்தது.எனினும், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 27 சதவீதம் குறைந்து 1,478 கோடி டாலராக (81,290 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.
சேவை துறை:இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 2,029 கோடி டாலராக (1.12 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில், குறைந்த அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது தான், ஒட்டு மொத்த முதலீடு குறைந்ததற்கு காரணம்.சென்ற செப்டம்பரில், சேவை துறையில் 360 கோடி டாலர் அளவிற்கு, அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறை (311 கோடி டாலர்), உலோக துறை (121 கோடி டாலர்), கட்டுமான துறை (69.10 கோடி டாலர்) மற்றும் வாகன துறை (74.30 கோடி டாலர்) ஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது.
சென்ற அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், மொரீஷியஸ் நாட்டில் இருந்து, மிக அதிகமாக, அதாவது 675 கோடி டாலர் அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அடுத்த இடங்களில், ஜப்பான் (152 கோடி டாலர்), சிங்கப்பூர் (124 கோடி டாலர்), நெதர்லாந்து (105 கோடி டாலர்), இங்கிலாந்து (61.10 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன. நடப்பு நிதியாண்டில், சென்ற செப்டம்பரில் தான், மிக அதிகமாக, 467 கோடி டாலர் அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில் 3,650 கோடி டாலர் அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது.
துறைமுகங்கள்:இது, முந்தைய 2010-11 மற்றும் 2009-10ம் நிதியாண்டுகளில், முறையே 1,942 கோடி டாலர் மற்றும் 2,583 கோடி டாலராக இருந்தது.இந்தியாவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு துறைகளுக்கு, 1 லட்சம் கோடி டாலர் (55 லட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு முதலீடு தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, அன்னிய நேரடி முதலீடு மிகவும் அவசியம். பொதுவாக அன்னிய முதலீட்டு வரத்து குறையும் நிலையில் அது ரூபாயின் வெளிமதிப்பிலும், அயல் நாட்டு வர்த்தகம் சார்ந்த நிதி நிலுவையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)