பதிவு செய்த நாள்
22 டிச2012
23:51
மும்பை:நடப்பு நிதியாண்டில், வங்கிகள், வீட்டு வசதி கடனுக்காக, 1.70 லட்சம் கோடி ரூபாயை வழங்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில், வங்கிகள், வீட்டு வசதி கடனுக்காக, 1.30 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக,தேசிய வீட்டு வசதி வங்கியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.நாடு தழுவிய அளவில், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், வாங்கக் கூடிய விலையில், குடியிருப்புகள் உள்ளன. இதனால், பொது மக்கள், வங்கியில் கடன் பெற்று, அந்நகரங்களில் குடியிருப்புகளை வாங்கி வருகின்றனர்.நடப்பு நிதியாண்டின், முதல் எட்டு மாத காலத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, வீட்டு வசதி கடன் வழங்கியுள்ளது.
இவ்வங்கி, சென்ற நிதியாண்டில், 2 லட்சம் குடியிருப்புக்களுக்கு, 28 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வழங்கி யிருந்தது. இவ்வங்கியின், ஒரு குடியிருப்புக்கான சராசரி கடன், 12 லட்சம் ரூபாய்.தனியார் துறையில், வீட்டு வசதி கடன் வழங்குவதில், ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் (எச்.டீ.எப்.சி.), முதலிடத்தில் உள்ளது.இந்நிறுவனம், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், வீட்டு வசதிக்காக வழங் கிய கடன், முந்தைய நிதியாண்டின், இதே காலத்தை விட, 31 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வங்கியின், ஒரு குடியிருப்புக்கான சராசரி கடன் அளவு, 21.50 லட்சம் ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|