ஒரே நாளில் 50 ஆயிரம் பயணிகள் ஏர் - இந்தியா புதிய சாதனைஒரே நாளில் 50 ஆயிரம் பயணிகள் ஏர் - இந்தியா புதிய சாதனை ... விஸ்வரூபம் எடுக்கும் இந்திய விருந்தோம்பல் துறை விஸ்வரூபம் எடுக்கும் இந்திய விருந்தோம்பல் துறை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய நிறுவனங்கள் ரூ.1.22 லட்சம் கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2012
00:29

மும்பை:அன்னிய நிதி நிறுவனங்கள், சாதனை அளவாக, நடப்பு டிசம்பர் 21ம் தேதி நிலவரப்படி 1.22 லட்சம் கோடி ரூபாயை (2,300 கோடி டாலர்), இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன.இது, சென்ற 2011ம் ஆண்டு, இதே காலத்தில், மிக குறைந்த அளவாக, 18,380 கோடி ரூபாயாக (340 கோடி டாலர்) இருந்தது.
கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு, நடப்பு 2012ம் ஆண்டில் தான், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச்சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.நடப்பு டிசம்பரில், அன்னிய நிதி நிறுவனங்கள், 57,023 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. அதே சமயம், 38,644 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில், 18,380 கோடி ரூபாய் நிகர முதலீடு மேற்கொண்டுள்ளன.
கடந்த 2010ம் ஆண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் 1.33 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நிகர முதலீடு மேற்கொண்டன. அதே சமயம், சென்ற 2011ம் ஆண்டில், இந்நிறுவனங்கள், நிகர அளவில் 2,714 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. நடப்பு 2012ம் ஆண்டில், இதுவரை, 1.22 கோடி ரூபாய் அளவிற்கு, அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு மேற்கொண்டுள்ளன.
இது, கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை, மேற்கொள்ளப்பட்ட 1.61 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் ஒப்பிடும்போது, 24 சதவீதம் குறைவு.அதேபோன்று, நடப்பாண்டில் சென்ற 21ம் தேதி நிலவரப் படி, பதிவு செய்து கொண்ட அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை 1,755 ஆக குறைந்துள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டில் 1,767 ஆக இருந்தது. 2010ம் ஆண்டு 1,718 ஆக மிகவும் குறைந்து காணப்பட்டது. அன்னிய நேரடி முதலீட்டை பொறுத்தவரை, சென்ற அக்டோபர் மாதம் வரையில், 194 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, 67 சதவீத வளர்ச்சியாகும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)