பதிவு செய்த நாள்
26 டிச2012
00:32
புதுடில்லி:நாட்டில், பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம், இவற்றை ஈடுசெய்யும் அளவிற்கு, உள்நாட்டில், இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி இல்லா ததால், நம் நாடு, அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொள்கிறது.
இயற்கை எரிவாயு:இயற்கை எரிவாயுவுடன் ஒப்பிடும்போது, உள்நாட்டில், கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. என்றாலும், ஒட்டுமொத்த அளவில், இவற்றின் உற்பத்தி வளர்ச்சி குறைந்து வருகிறது.இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற நவம்பர் மாதத்தில், உள்நாட்டில், இயற்கை எரிவாயு உற்பத்தி, 326.20 கோடி கன மீட்டராக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 385 கோடி கன மீட்டராக இருந்தது.
பெட்ரோலிய பொருட்கள்:இதே மாதங்களில், கச்சா எண்ணெய் உற்பத்தி, 30.83 லட்சம் டன்னிலிருந்து, 31.07 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மேலும், இதே மாதங்களில், பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை, 1.29 கோடி டன்னிலிருந்து, 1.30 டன்னாக சற்றே உயர்ந்துள்ளது.
இதில், மும்பையில் அமைந்துள்ள பொதுத் துறையை சேர்ந்த ஆயில் அண்டு நேச்சுரல் காஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.,) நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 6.8 சதவீதம் குறைந்து உள்ளது. அதேசமயம், ராஜஸ் தானில், கெய்ரன் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 9.2 சதவீதம் உயர்ந்துள்ளது.
பெட்ரோலிய பொருட்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய, இந்தியாவில் செயல்படும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொள்கின்றன.உள்நாட்டில் உள்ள பொதுத் துறையை சேர்ந்த 18 சுத்திகரிப்பு ஆலைகளும், தனியார் துறையை சேர்ந்த இரண்டு சுத்திகரிப்பு ஆலை களுமாக, சென்ற நவம்பர் மாதத்தில், 1.51 கோடி டன் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்துள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்:இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 1.49 கோடி டன்னாக இருந்தது. அதேசமயம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஜாம்நகரில் உள்ள அதன் ஏற்றுமதி சார்ந்த சுத்திகரிப்பு ஆலையின், உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு குறித்த விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|