பதிவு செய்த நாள்
27 டிச2012
00:08
புதுடில்லி:மீண்டும் விமானச் சேவையை துவங்க அனுமதி கோரி, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அளித்த நிதி சீர்திருத்த அறிக்கை தெளிவாக இல்லை என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையாவின், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 250 கோடி டாலர் கடனில் மூழ்கியுள்ளது. சென்ற அக்டோபர் மாதம் முதல், இதன் விமானச் சேவை அடியோடு முடங்கியுள்ளது.
கடன்களை தீர்ப்பது தொடர்பான, நிதி சீர்திருத்த திட்டத்தை அளிக்கும்பட்சத்தில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மீண்டும் விமான சேவையை துவக்க அனுமதிக்கப்படும் என, விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருந்தது.இதையடுத்து, சில தினங்களுக்கு முன், மறுசீரமைப்பு திட்டத்தை கிங்பிஷர் அளித்தது.இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஜீத்சிங், "கிங்பிஷர் அளித்துள்ள அறிக்கையில், முதலீடு திரட்டுவது குறித்து தெளிவுபடுத்தவில்லை' என்று, தெரிவித்தார்.
விஜய்மல்லையாவிற்கு மீண்டும் விமானச் சேவையை துவக்க விருப்பமிருந்தாலும், அவரது யுனைடெட் புருவரீஸ் குழுமம், கடனுக்கான உத்தரவாதம் எதையும் அளிக்க தயார் என்று கூறவில்லை. எனவே, திடமான திட்டம் தேவை என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இதனால், கிங்பிஷர் ஏர்லைன்ஸ், உடனடியாக விமானச் சேவையை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் விமானச் சேவை உரிமம், வரும் 31ம் தேதியுடன் காலாவதியாகிறது. இதனால், கிங்பிஷருக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|