பதிவு செய்த நாள்
28 டிச2012
23:46
மும்பை: சென்ற நவம்பர் மாதத்தில்,இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தக கடன் வாயிலாக, திரட்டி தொகை, 135 கோடி டாலராக (7,425 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவாக, நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு வர்த்தக கடன் கடந்த அக்டோபர் மாதத்தில், 400 கோடி டாலர் (22 ஆயிரம் கோடி ரூபாய்) என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.மதிப்பீட்டு மாதத்தில், திரட்டப்பட்ட மொத்த வர்த்தக கடனில், பொறியியல் சாதனங்கள் இறக்குமதிக்காக நிறுவனங்கள் திரட்டிய கடனின் பங்களிப்பு, 16.50 கோடி டாலராக உள்ளது. இது தவிர, நிறுவனங்களின், நவீனமயமாக்கலுக்காக, 11 கோடி டாலரும், புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காக, 19 கோடி டாலரும் திரட்டிக் கொள்ளப்பட்டுள்ளது.சின்டெக்ஸ், போக்ரானா, பர்ஸ்ட் சோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், அன்னியச் செலாவணியில் பங்குகளாக மாறக்கூடிய கடன்பத்திரங்களை வெளியிட்டு, வெளிநாடுகளிலிருந்து, கடன் திரட்டிக் கொண்டுள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|