பதிவு செய்த நாள்
28 டிச2012
23:48
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -மத்திய வர்த்தக அமைச்சகம், ஜவுளி துறை பயன் பெறும் வகையில், இரண்டு சதவீத வட்டி மானிய சலுகையை, வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது.இதனால், ஆடை தயாரிப்பு நிறுவனங்களின், நடைமுறை செலவினமும், உற்பத்தி செலவும் குறையும். இதையடுத்து, ஏற்றுமதிக்கான ஆடைகளின் விலை குறையும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.மேலும், சர்வதேச சந்தையில் நிலவும் கடும் போட்டியையும், இந்திய ஆடை ஏற்றுமதி நிறுவனங்களால் சமாளிக்க இயலும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தோனேஷியா, வங்கதேசம், துருக்கி, மெக்சிகோ ஆகிய நாடுகள், குறைந்த விலையில், ஆயத்த ஆடைகளை சர்வதேச சந்தையில் விற்பனை செய்கின்றன.ஆனால், இந்திய ஆயத்த ஆடைகளின் விலை அதிகமாக உள்ளதால், ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நீட்டிக்கப்பட்டுள்ள மானிய சலுகையால், பன்னாட்டு நிறுவனங்களுடன், இந்திய ஆடை நிறுவனங்கள் போட்டி போடும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|