பதிவு செய்த நாள்
28 டிச2012
23:50
கொச்சி: உற்பத்தி குறைவு மற்றும் ஏற்றுமதிக்கான தேவை அதிகரிப்பால், உள்நாட்டில் ஏலக்காய் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, நடப்பு சந்தையில், ஒரு கிலோ ஏலக்காய் விலை, 820-830 ரூபாயாக உள்ளது.கடந்த ஆண்டில், ஏலக்காய் விளைச்சல், நன்கு இருந்ததையடுத்து, இதன் உற்பத்தி மிக அதிகளவாக, 16,000 - 20,000 டன் என்ற அளவில் இருந்தது. மழை பொழிவுநடப்பாண்டில், நாட்டில் போதுமான அளவிற்கு மழை இல்லாததால், ஏலக்காய் உற்பத்தி, 20 முதல் 25 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இதன் உற்பத்தி, 50 சதவீத அளவிற்கு சரிவடையும் என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதேசமயம், சர்வதேச சந்தையில் ஏலக்காய்க்கு தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, உள்நாட்டில், ஒரு கிலோ ஏலக்காய், சராசரி விலையான, 650 ரூபாயிலிருந்து, 830 ரூபாயாக உயர்ந்துள்ளது.கவுதமாலாவில் ஏலக்காய் உற்பத்தி சரிவடைந்ததையடுத்து, கடந்த, 2011ம் ஆண்டில், இதன் ஏற்றுமதி, மிகவும் அதிகபட்சமாக, 4,650 டன் என்ற அளவில் இருந்தது. எனினும், நடப்பாண்டில், இந்த அளவிற்கு ஏலக்காய் ஏற்றுமதி மேற்கொள்ள வாய்ப்பில்லை என, நறுமணப் பொருட்கள் வாரியத்தைச் சேர்ந்த, உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏற்றுமதிஇதனை எடுத்துக்காட்டும் வகையில், நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டின், அக்டோபர் வரையிலான காலத்தில், ஏலக்காய் ஏற்றுமதி, 1,000 டன் என்ற அளவிலேயே உள்ளது. இது, கடந்த, 2011 - 12ம் நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 56 சதவீதம் குறைவு.எனவே, நடப்பு முழு நிதியாண்டில், ஏலக்காய் ஏற்றுமதி, 1,500 - 2,000 டன் என்ற அளவில் தான் இருக்கும் என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|