பதிவு செய்த நாள்
28 டிச2012
23:52
புதுடில்லி: நடப்பு, 2012ம் ஆண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பல்வேறு திட்டங்களின் கீழ் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு, 8 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. இது, சென்ற, 2011ம் ஆண்டு, 6.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து, ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட, 2 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சீர்திருத்த திட்டங்கள்நடப்பாண்டில், இந்நிறுவனங்கள், ஒட்டுமொத்த அளவில், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மத்திய அரசின் நிதி சீர்திருத்த திட்டங்களும், அதை தொடர்ந்து பங்குச் சந்தையின் எழுச்சியும், பரஸ்பர நிதி துறையின் வளர்ச்சிக்கு, துணை புரிந்துள்ளன.குறிப்பாக, நிலையான வருவாய் பிரிவு, தங்கம் மற்றும் குறுகிய கால முதலீட்டு திட்டங்களில், அதிக அளவிலான முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடப்பாண்டு, நிலையான வருவாய் வழங்கும், நிதிச் சந்தை முதலீட்டு திட்டங்களில்("இன்கம் பண்டு'), பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 89,302 கோடி அதிகரித்து, 1.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதுபோன்று, குறுகிய கால "லிக்யுட்' பண்டுகளில், 89,302 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முதலீட்டு பிரிவுகளின் கீழ், பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 3.87 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சேமிப்பு திட்டங்கள்இதே காலத்தில், பங்கு சார்ந்த, பரஸ்பர நிதி முதலீட்டு திட்டங்களில், 1.65 லட்சம் கோடி ரூபாய் வரை, முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், இதே காலத்தில், இத்திட்டங்களில் இருந்து, 9,300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது.இருப்பினும், பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டங்களில், 1,400 கோடி ரூபாய் அளவிற்கு, முதலீடு திரும்ப பெற்றபோதிலும், இப்பிரிவில் நிர்வகிக்கப்படும், நிகர சொத்து மதிப்பு, 25,027 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு ஆண்டில், "கில்ட்' பண்டுகளில், 1,567 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்பிரிவில் பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 5,426 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், "கோல்டு இ.டி.எப்' திட்டங்களில், 954 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இப்பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 12 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வங்கி பங்குகள்பங்கு சார்ந்த, பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் திரட்டப்பட்ட நிதியில், அதிகளவு வங்கிப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், வங்கிப் பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டின் பங்களிப்பு, 20.59 சதவீதம், அதாவது, 42 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.பரஸ்பர நிதி துறையை ஊக்கப்படுத்தும் நோக்கில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்படி, சாதாரணமானவர்களும், சுலபமாக முதலீடு செய்வதற்கு வசதியாக, பரஸ்பர நிதி திட்ட முதலீட்டிற்கான வழிமுறைகள் மிகவும் எளிமைபடுத்தப்பட்டுள்ளன.முதலீட்டாளர் நலன் கருதி, ஒருவரின் பரஸ்பர நிதி முதலீடுகள் குறித்த மாதாந்திர பரிவர்த்தனை விவரங்களை, அஞ்சல் மற்றும் மின்னஞ்சலில் அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், பரஸ்பர நிதி முதலீடு குறித்த, விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, குறிப்பிட்ட தொகையை, பரஸ்பர நிதியங்கள் ஒதுக்க வேண்டும் என, "செபி' உத்தரவிட்டுள்ளது.முகவர்கள்மேலும், பரஸ்பர நிதி திட்ட முதலீட்டாளர்களிடம் வசூலிக்கும் தொகையில், குறிப்பிட்ட சதவீதத்தை, முகவர்களுக்கு வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரஸ்பர நிதி திட்ட முகவர்கள், ஆர்வத்துடன் செயல்படுகின்றனர்.இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளால், இந்திய பரஸ்பர நிதி துறை வளர்ச்சி கண்டு வருகிறது. இது, வரும், 2013ம் ஆண்டிலும் தொடரும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|