நடப்பு 2012ம் ஆண்டில் தங்கத்தின் விலை12.54 சதவீதம் வளர்ச்சி நடப்பு 2012ம் ஆண்டில் தங்கத்தின் விலை12.54 சதவீதம் வளர்ச்சி ... தங்கம் உற்பத்தியில் சீனா முதலிடம் தங்கம் உற்பத்தியில் சீனா முதலிடம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.8 லட்சம் கோடி : ஒரே ஆண்டில் ரூ. 2 லட்சம் கோடி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2012
23:52

புதுடில்லி: நடப்பு, 2012ம் ஆண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பல்வேறு திட்டங்களின் கீழ் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு, 8 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. இது, சென்ற, 2011ம் ஆண்டு, 6.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து, ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட, 2 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சீர்திருத்த திட்டங்கள்நடப்பாண்டில், இந்நிறுவனங்கள், ஒட்டுமொத்த அளவில், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மத்திய அரசின் நிதி சீர்திருத்த திட்டங்களும், அதை தொடர்ந்து பங்குச் சந்தையின் எழுச்சியும், பரஸ்பர நிதி துறையின் வளர்ச்சிக்கு, துணை புரிந்துள்ளன.குறிப்பாக, நிலையான வருவாய் பிரிவு, தங்கம் மற்றும் குறுகிய கால முதலீட்டு திட்டங்களில், அதிக அளவிலான முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடப்பாண்டு, நிலையான வருவாய் வழங்கும், நிதிச் சந்தை முதலீட்டு திட்டங்களில்("இன்கம் பண்டு'), பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 89,302 கோடி அதிகரித்து, 1.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அதுபோன்று, குறுகிய கால "லிக்யுட்' பண்டுகளில், 89,302 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முதலீட்டு பிரிவுகளின் கீழ், பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 3.87 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சேமிப்பு திட்டங்கள்இதே காலத்தில், பங்கு சார்ந்த, பரஸ்பர நிதி முதலீட்டு திட்டங்களில், 1.65 லட்சம் கோடி ரூபாய் வரை, முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், இதே காலத்தில், இத்திட்டங்களில் இருந்து, 9,300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது.இருப்பினும், பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டங்களில், 1,400 கோடி ரூபாய் அளவிற்கு, முதலீடு திரும்ப பெற்றபோதிலும், இப்பிரிவில் நிர்வகிக்கப்படும், நிகர சொத்து மதிப்பு, 25,027 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு ஆண்டில், "கில்ட்' பண்டுகளில், 1,567 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்பிரிவில் பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 5,426 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், "கோல்டு இ.டி.எப்' திட்டங்களில், 954 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இப்பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 12 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வங்கி பங்குகள்பங்கு சார்ந்த, பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் திரட்டப்பட்ட நிதியில், அதிகளவு வங்கிப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், வங்கிப் பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டின் பங்களிப்பு, 20.59 சதவீதம், அதாவது, 42 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.பரஸ்பர நிதி துறையை ஊக்கப்படுத்தும் நோக்கில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்படி, சாதாரணமானவர்களும், சுலபமாக முதலீடு செய்வதற்கு வசதியாக, பரஸ்பர நிதி திட்ட முதலீட்டிற்கான வழிமுறைகள் மிகவும் எளிமைபடுத்தப்பட்டுள்ளன.முதலீட்டாளர் நலன் கருதி, ஒருவரின் பரஸ்பர நிதி முதலீடுகள் குறித்த மாதாந்திர பரிவர்த்தனை விவரங்களை, அஞ்சல் மற்றும் மின்னஞ்சலில் அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், பரஸ்பர நிதி முதலீடு குறித்த, விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, குறிப்பிட்ட தொகையை, பரஸ்பர நிதியங்கள் ஒதுக்க வேண்டும் என, "செபி' உத்தரவிட்டுள்ளது.முகவர்கள்மேலும், பரஸ்பர நிதி திட்ட முதலீட்டாளர்களிடம் வசூலிக்கும் தொகையில், குறிப்பிட்ட சதவீதத்தை, முகவர்களுக்கு வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரஸ்பர நிதி திட்ட முகவர்கள், ஆர்வத்துடன் செயல்படுகின்றனர்.இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளால், இந்திய பரஸ்பர நிதி துறை வளர்ச்சி கண்டு வருகிறது. இது, வரும், 2013ம் ஆண்டிலும் தொடரும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)