பதிவு செய்த நாள்
28 டிச2012
23:52
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று நன்கு இருந்தது. டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்ற அறிவிப்பால், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறியதை அடுத்து, "சென்செக்ஸ்', 0.63 சதவீத ஏற்றத்துடன் முடிவடைந்தது.மேலும், ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட, இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வர்த்தகத்தில், ஆரோக்ய பராமரிப்பு துறை தவிர்த்து, ஏனைய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', வர்த்தகம் முடியும் போது, 121.04 புள்ளிகள் அதிகரித்து, 19,444.84 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,465.74 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,346.07 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி., இன்போசிஸ் உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், சன்பார்மா, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 38.25 புள்ளிகள் உயர்ந்து, 5,908.35 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,915.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,879.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|