பதிவு செய்த நாள்
30 டிச2012
00:28
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 21ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 10 கோடி டாலர் (550 கோடி ரூபாய்) குறைந்து, 29,653 கோடி டாலராக (16.30 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய, 14ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,663 கோடி டாலராக (16.31 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 26,295 கோடி டாலர் என்ற அளவிலும், சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 2,780 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளன.எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 445 கோடி டாலர் என்ற அளவிலும், சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 223 கோடி டாலர் என்ற அளவிலும் உள்ளன. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 227 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|