பதிவு செய்த நாள்
30 டிச2012
23:40
சென்னை: சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஓராண்டு காலத்தில், தமிழகத்தில் உள்ள வங்கிகள் திரட்டிய டெபாசிட், 20.92 சதவீதம் வளர்ச்சிகண்டு, 4.02 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.இதே காலத்தில், இவ்வங்கிகள் வழங்கிய கடன், 22.01 சதவீதம் வளர்ச்சியடைந்து, 4.73 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.இந்தியாவில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் உள்ள வங்கிகள், திரட்டும் டெபாசிட்டும், வழங்கும் கடன்களின் அளவும் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.கணக்கீட்டு காலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த வங்கிகள், முன்னுரிமை துறைக்கு வழங்கிய கடனின் அளவு, 41 சதவீதம் என்ற அளவிலும், வேளாண் துறைக்கு வழங்கிய கடன் அளவு, 18.27 சதவீதம் என்ற அளவிலும் உள்ளன. இவை, தேசிய அளவில் முறையே, 40 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|