பதிவு செய்த நாள்
30 டிச2012
23:41
மும்பை: பரஸ்பர நிதி நிறுவனங்கள், நவம்பர் மாதம் வரையிலுமாக, 42,022 கோடி ரூபாயை வங்கிகளின் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இதையடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள், பங்கு சார்ந்த திட்டங்களில் நிர்வகிக்கும் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு, 2.04 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், வங்கி துறையின் பங்களிப்பு, 20.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும் என, "செபி' அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2012ம் ஆண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், வங்கி பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு, நிலையான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனை எடுத்துக்காட்டும் வகையில், சென்ற ஜனவரி மாதத்தில்,வங்கி பங்குகளில், 32,380 கோடி ரூபாயாக இருந்த பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு, சென்ற நவம்பரில், 42,022 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது இப்பிரிவில், பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்களிப்பு, 17.23 சதவீதத்திலிருந்து, 20.59 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.வங்கி துறையை தவிர்த்து, வேறு எந்த துறைகளும், இரட்டை இலக்க அளவிற்கு வளர்ச்சி காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|