கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.16,975 கோடியாக அதிகரிப்பு கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.16,975 கோடியாக அதிகரிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
புதிய ரகத்தால் பாசுமதி அரிசி ஏற்றுமதி உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2012
23:42

புதுடில்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐ.ஏ.ஆர்.ஐ), சோதனை அடிப்படையில் உருவாக்கிய, புதிய "புசா-1509' பாசுமதி நெல் சாகுபடி பெரும் வெற்றி பெற்றுள்ளது.இதையடுத்து, வரும் ஆண்டின் கரீப் பருவத்தில், இவ்வகை பாசுமதி நெல் அதிக பரப்பளவில் பயிரிடப்பட உள்ளது.புதிய பாசுமதி நெல்இதனால், பாசுமதி அரிசி உற்பத்தி அதிகரிக்கும் என்பதுடன், ஏற்றுமதியும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில், தற்போது "புசா-1121' பாசுமதி நெல் பயிரிடப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில், இவ்வகை பாசுமதி அரிசிக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்தியாவின் மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதியில், இதன் பங்களிப்பு, 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.எனினும், இதன் சாகுபடி காலம், தேவைப்படும் பாசன வசதி ஆகியவற்றை குறைத்து, தரத்தை அதிகரிக்கும் முயற்சியை இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் மேற்கொண்டது.கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி, தற்போது வெற்றி பெற்றுள்ளது.தற்போதுள்ள "புசா-1121' பாசுமதி நெல்லின் முதிர்வுக் காலம், 145 -155 நாட்கள் என்ற அளவில் உள்ளது. ஒரு ஹெக்டேரில், 4.5 டன் பாசுமதி நெல் உற்பத்தியாகிறது.அதே சமயம், வேளாண் விஞ்ஞானிகள், பஞ்சாபில், சோதனை அடிப்படையில் மேற்கொண்ட, "புசா-1509' பாசுமதி நெல்லின் முதிர்வுக் காலம், 125 நாட்கள் என்ற அளவில் குறைந்துள்ளது. மேலும், ஒரு ஹெக்டேருக்கு 6.5 டன் என்ற அளவில் விளைச்சல் உள்ளது. இத்துடன், இந்த நெல்லின் தரமும், உயர்வாக உள்ளது.இதனால், இவ்வகை நெல் பயிரிடும் விவசாயிகள், குறைந்த பாசன வசதியில், கூடுதலான மகசூலை பெறவும், அதிக வருவாய் ஈட்டவும் வழி பிறந்துள்ளது.அடுத்த ஆண்டு கரீப் பருவத்தில், இவ்வகை நெல் விதைகளை நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்த, ஐ.ஏ.ஆர்.ஐ., திட்டமிட்டுள்ளது. குறுகிய கால பயிர் என்பதாலும், வெளிநாடுகளில் இந்திய பாசுமதி அரிசிக்கான தேவை அதிகரித்து வருவதாலும், "புசா-1509' பாசுமதி அரிசி பெரும் வரவேற்பை பெறும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சவுதி அரேபியாதற்போதுள்ள "புசா-1121' பாசுமதி நெல், கடந்த 2003 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில், 26 லட்சம் ஹெக்டேரில், பாசுமதி நெல் வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில், "புசா-1121' நெல், 15 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்படுகிறது.இந்த வகை பாசுமதி அரிசிக்கு, ஈரான், சவுதி அரேபியா போன்ற, மேற்காசிய நாடுகளில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.இதனால் இதன் ஏற்றுமதி, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2006-07ம் ஆண்டு, நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 2,792 கோடி ரூபாயாக இருந்தது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 15,450 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இது, 16 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும் ஆண்டில், புதிய பாசுமதி அரிசி உற்பத்தி பரவலாகும் பட்சத்தில், ஒட்டுமொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டும் என, தெரிகிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)