கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.16,975 கோடியாக அதிகரிப்பு கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.16,975 கோடியாக அதிகரிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2012
23:43

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த அளவில் கடல் உணவு பொருள் ஏற்றுமதி குறைந்துள்ளது.குறிப்பாக, அமெரிக்கா தவிர்த்த, சீனா, ஜப்பான் உள்ளிட்ட இதர நாடுகளுக்கான இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது என, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகள்கடந்த 10 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, அமெரிக்காவிற்கான கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, அளவு மற்றும் ரூபாய் மதிப்பின் அடிப்படையில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்களிப்பு, 24.40 சதவீதமாக உள்ளது. இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பு, 24.18 சதவீத பங்களிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், அமெரிக்காவிற்கான, இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 11.42 சதவீதம் வளர்ச்சி கண்டு, 40,873 டன்னிலிருந்து, 45,540 டன்னாக அதிகரித்துள்ளது. இதே போன்று, ரூபாய் மதிப்பு அடிப்படையிலான இதன் ஏற்றுமதியும் 9.33 சதவீதம் உயர்ந்துள்ளது.ஜப்பான் அமெரிக்காவிற்கான கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி <<உயர்ந்துள்ள நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பிய கூட்டமைப்பு, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான இதன் ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது.குறிப்பாக, ஜப்பான் நாட்டிற்கான கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 14.26 சதவீதம் வீழ்ச்சிஅடைந்து, 42,182 டன்னிலிருந்து, 36,169 டன்னாக சரிவடைந்துள்ளது.மேலும், டாலர் மற்றும் ரூபாய் மதிப்பு அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி குறைந்துஉள்ளது.இதேபோன்று, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு, அளவின் அடிப்படையிலான கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 11.27 சதவீதம் குறைந்து, 79,813 டன்னிலிருந்து, 70,822 டன்னாக சரிவடைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சீனாவிற்கான, இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, முன் எப்போதும் இல்லாத அளவாக, மிகவும் சரிவடைந்துள்ளது. அதாவது, இந்நாட்டிற்கான, இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 33.09 சதவீதம் சரிவடைந்து, 32,116 டன்னிலிருந்து, 21,488 டன்னாகவும், ரூபாய் மதிப்பு அடிப்படையில், 486 கோடியிலிருந்து, 435 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.ஆசிய நாடுகள்தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான, இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 12.74 சதவீதம் குறைந்து, 1,22,694 டன்னிலிருந்து, 1,07,068 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.அளவின் அடிப்படையில், நாட்டின் கடல் உணவுப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்து கொண்டதில், 31 சதவீத பங்களிப்புடன் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன.இதைத் தொடர்ந்து, ஐரோப்பா (20 சதவீதம்), அமெரிக்கா (13 சதவீதம்), ஜப்பான் (10 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, விலை குறைந்த கானாங்கெளுத்தி மற்றும் மேலும் சில சிறப்பு வகை மீன்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய இறால்களில், "எதாக்ஸிகியுன்' என்ற நச்சுப் பொருள், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக உள்ளது எனக் கூறி,சென்ற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், இவற்றின் ஏற்றுமதிக்கு ஜப்பான் அரசு தடை விதித்தது. இதனால், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.இதையடுத்து, இப்பிரச்னையை தீர்த்து வைக்க கோரி, இந்தியா, சர்வதேச வர்த்தக அமைப்பிடம் (டபிள்யூ.டி.ஓ.,) முறையீடு செய்தது. இருப்பினும், இப்பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கட்டுப்பாடுகள்மதிப்பீட்டு காலத்தில், இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி சரிவடைந்துள்ளதற்கு மேற்கூறிய நிலவரங்கள் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பொருளாதார மந்த நிலையும் முக்கிய காரணமாக உள்ளது.இவைமட்டுமின்றி, சீனா போன்ற நாடுகள், புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தர நிர்ணயங்களை அறிவித்துள்ளதும், இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி சரிவடைய வழிவகுத்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)