பதிவு செய்த நாள்
02 ஜன2013
00:13
புதுடில்லி:இந்தியாவின் வெளிநாட்டு கடன், சென்ற 2012ம் ஆண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், 5.8 சதவீதம் உயர்ந்து, 36,530 கோடி டாலராக (20 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. அயல்நாடுகளில், நிறுவனங்கள் திரட்டிய வர்த்தக கடன், அரசின் குறுகிய மற்றும் நீண்ட கால கடன் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட் உயர்வு போன்றவற்றால், இந்தியாவின் வெளிநாட்டு கடன் அதிகரித்துள்ளது.
சென்ற ஆண்டின், செப்டம்பர் வரையிலான காலத்தில், வெளிநாடுகளிலிருந்து, இந்திய அரசு திரட்டிய நீண்ட கால அடிப்படையிலான கடன், 5.1 சதவீதம் அதிகரித்து, 28,080 கோடி டாலராக (15.44 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.இதே போன்று, குறுகிய கால அடிப்படையிலான கடன், 8.1 சதவீதம் உயர்ந்து, 8,450 கோடி டாலராக (4.65 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த வெளிநாட்டு கடனில், நீண்டகால அடிப்படையிலான கடன்களின் பங்களிப்பு, 76.9 சதவீதமாகவும், குறுகிய கால கடன்களின் பங்களிப்பு, 23.1 சதவீதமாகவும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|