பதிவு செய்த நாள்
02 ஜன2013
00:20
மும்பை:சென்ற 2012ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், வங்கிகளின் சில்லரை கடன், 16.3 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, முந்தைய 2011ம் ஆண்டு, நவம்பரில், 13.3 சதவீதம் என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, வீட்டு வசதி மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியை, வங்கிகள் குறைத்தன.
மேலும், பல வங்கிகள், சில்லரை கடன்களுக்கான பரிசீலனை கட்டணங்களை ரத்து செய்தன. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக நவம்பரில் தான் அதிக அளவில், சில்லரை கடன் வழங்கப்பட்டுள்ளது.சென்ற நவம்பரில், வங்கிகள், வழங்கிய வாகனக் கடன், 25.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில், 22.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், வீட்டு வசதி கடன், 12.1 சதவீதத்திலிருந்து, 13.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.தொழில் துறைக்கு வழங்கிய கடன், 15.2 சதவீதத்திலிருந்து, 17.7 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.சேவை துறைக்கு வழங்கிய கடன், 13.7 சதவீதத்திலிருந்து, 15.3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|