பதிவு செய்த நாள்
02 ஜன2013
00:26
புதுடில்லி:புத்தாண்டு பிறந்ததை அடுத்து, கார் தயாரிப்பு நிறுவனங்கள், புதிய கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. வாரம் ஒரு புதிய கார் வீதம், நடப்பாண்டில் 50 கார்கள் அறிமுகமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சலுகைகள்:கடந்த ஆண்டின் கடைசியில், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், கார் தயாரிப்பு நிறுவனங்கள், கவர்ச்சிகரமான சலுகைகள், தள்ளுபடிகள் உள்ளிட்டவற்றை வாரி வழங்கின.புத்தாண்டு துவங்கியதை தொடர்ந்து, புதிய கார்களை வெளியிடுவதில், கார் தயாரிப்பு நிறுவனங்களின் கவனம் திரும்பிஉள்ளது.
இந்த வகையில், நடப்பு ஆண்டில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், "சபாரி ஸ்டார்மி' என்ற புதிய காரை அறிமுகம் செய்கிறது. இது, மகேந்திரா அண்டு மகேந்திராவின் "ஸ்கார்பியோ', "பொலேரோ', "எக்ஸ்யூவி-500', ரெனோ நிறுவனத்தின் "டஸ்டர்' ஆகிய கார்களுக்கு கடும் போட்டியாக களமிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், "செயில்' சொகுசு காரையும், மாருதியின் "எர்டிகா'விற்கு போட்டியாக "என்ஜாய்' என்ற காரையும் அறிமுகப்படுத்த உள்ளது.
போர்டு நிறுவனம் :"எகோஸ்போர்ட்' காரையும், போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், "குர்கா டிராக்ஸ்' மற்றும் பன்முக பயன்பாட்டு கார் ஒன்றையும் வெளியிட உள்ளன.
மகிந்திரா:டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட "மான்சா' காரை அறிமுகப்படுத்துகிறது. அசோக் லேலண்டு நிறுவனம், நிசானின் "இவாலியா' போன்ற கார் ஒன்றின் வெளியீட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், வரிச் சலுகை பெறும் நோக்கில், நான்கு மீட்டர் நீளத்திற்குள் தயாரித்து வரும் புதிய காரை, வரும் மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம், பெரிதும் எதிர்பார்க்கப்படும் "அமேஸ்' காரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது, டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் வசதிகளுடன் விற்பனைக்கு வருகிறது.மேற்கண்டவை தவிர, விலை உயர்ந்த கார்களை தயாரித்து வரும் ஆடி, பீ.எம்.டபிள்யு., வால்வோ, போன்ற நிறுவனங்களும், நடப்பாண்டில் பல்வேறு மாடல்களில், புதிய கார்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|