பதிவு செய்த நாள்
03 ஜன2013
02:17
புதுடில்லி:வரும், 2015ம் ஆண்டில், இணையதளம் வாயிலான வணிக சந்தையின் மதிப்பு, 3,800 கோடி டாலராக (2.09 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, தனியார் ஆய்வு நிறுவனமொன்று மதிப்பிட்டுள்ளது.
அலைபேசி சாதனங்கள்:நாட்டில் கம்ப்யூட்டர், டேப்லெட், லேப்-டாப் போன்ற சாதனங்களால், இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள், தாங்கள் விரும்பும் பொருட்களை, வீட்டில் இருந்தவாறே, இணையதளம் வழியாக வாங்க முடிகிறது.அலைபேசி சாதனங்கள், கேமரா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, இணையதளம் வாயிலாக வாங்கும் வசதி உள்ளதால், இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில், ஹோம்ஷாப் 18 டாட் காம், இபே, பிளிப்கார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், இணையதள வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்ற ஜூன் மாதம் நிலவரப்படி, உள்நாட்டில், நகர் பகுதிகளில், 9.90 கோடி பேரும், கிராமங்களில், 3.80 கோடி பேரும், ஒட்டுமொத்த அளவில், 13.70 கோடி பேர், இணைய தளத்தை பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.சென்ற ஆண்டில், இணையதள வணிகத்தின் சந்தை மதிப்பு, இரண்டு மடங்கு உயர்ந்து, 1,400 கோடி டாலராக (77 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது.இது, கடந்த, 2011ம் ஆண்டில், 630 கோடி டாலர் (34,650 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது.
சந்தை மதிப்பு:விரைவாக வளர்ச்சி கண்டும் வரும் துறைகளில், இணையதள வணிக சந்தை குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது. இதையடுத்து, வரும், 2015ம் ஆண்டில், இணையதளம் வாயிலான வணிக சந்தையின் மதிப்பு, 3,800 கோடி டாலராக (2.09 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|