உற்பத்தியை உயர்த்த சிமென்ட் நிறுவனங்கள் திட்டம்:கட்டமைப்பு நடவடிக்கைகளில் முன்னேற்றம்உற்பத்தியை உயர்த்த சிமென்ட் நிறுவனங்கள் திட்டம்:கட்டமைப்பு ... ... சுற்றுலாத்தல சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு ரூ10 கோடி ஒதுக்கீடு சுற்றுலாத்தல சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு ரூ10 கோடி ஒதுக்கீடு ...
புத்தாண்டில் டாஸ்மாக் விற்பனை 2 நாளில் ரூ.185 கோடிக்கு எகிறியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2013
10:04

புத்தாண்டு தின கொண்டாட்டத்தையொட்டி, டாஸ்மாக் கடைகளில் ஜன., 1 மற்றும் டிச., 31ல் மட்டும், 185 கோடி ரூபாய்க்கு, "சரக்கு' விற்பனையாகிஉள்ளது. கடந்த ஆண்டை விட, 40 கோடி ரூபாய்க்கு இந்த ஆண்டு சரக்கு விற்பனை உயர்ந்துள்ளது. தமிழகத்தில், 6,805 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளின் மூலம் ஆண்டுதோறும், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாயை அதிகரிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில், தினமும் சராசரியாக, 50 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடக்கிறது. தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது விற்பனை அதிகரிக்கும். கடந்த தீபாவளி பண்டிகையின் போது, 370 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு விற்பனை இருந்தது.இந்நிலையில், டிச., 31ம் தேதி இரவு வரை, 95 கோடி ரூபாய்க்கும், புத்தாண்டு தினமான நேற்று, 90 கோடி ரூபாய்க்கும் சரக்கு விற்பனையானது. புத்தாண்டுக்கு, 200 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 185 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே சரக்கு விற்பனையாகியுள்ளது.கடந்த ஆண்டு டிச., 31 மற்றும் புத்தாண்டு தினத்தன்று, இரு தினங்களில் மட்டும், 145 கோடி ரூபாய் அளவுக்கே சரக்கு விற்பனையானது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த புத்தாண்டு தினத்தன்று, 40 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு விற்பனை உயர்ந்துஉள்ளது. இது, டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் பொங்கல் பண்டிகைக்கு டாஸ்மாக் சரக்கு விற்பனை, 370 கோடி ரூபாய் முதல், 400 கோடி ரூபாய் வரை, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட, "குடி'மகன்கள் அதிகளவில் விரும்பும் சரக்குகள், போதிய அளவு கடைகளில், "ஸ்டாக்' வைக்கவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மதுபான தொழிற்சாலைகளுக்கும் கூடுதலாக சரக்கு சப்ளை ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)