பதிவு செய்த நாள்
03 ஜன2013
10:04
புத்தாண்டு தின கொண்டாட்டத்தையொட்டி, டாஸ்மாக் கடைகளில் ஜன., 1 மற்றும் டிச., 31ல் மட்டும், 185 கோடி ரூபாய்க்கு, "சரக்கு' விற்பனையாகிஉள்ளது. கடந்த ஆண்டை விட, 40 கோடி ரூபாய்க்கு இந்த ஆண்டு சரக்கு விற்பனை உயர்ந்துள்ளது. தமிழகத்தில், 6,805 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளின் மூலம் ஆண்டுதோறும், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாயை அதிகரிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில், தினமும் சராசரியாக, 50 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடக்கிறது. தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது விற்பனை அதிகரிக்கும். கடந்த தீபாவளி பண்டிகையின் போது, 370 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு விற்பனை இருந்தது.இந்நிலையில், டிச., 31ம் தேதி இரவு வரை, 95 கோடி ரூபாய்க்கும், புத்தாண்டு தினமான நேற்று, 90 கோடி ரூபாய்க்கும் சரக்கு விற்பனையானது. புத்தாண்டுக்கு, 200 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 185 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே சரக்கு விற்பனையாகியுள்ளது.கடந்த ஆண்டு டிச., 31 மற்றும் புத்தாண்டு தினத்தன்று, இரு தினங்களில் மட்டும், 145 கோடி ரூபாய் அளவுக்கே சரக்கு விற்பனையானது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த புத்தாண்டு தினத்தன்று, 40 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு விற்பனை உயர்ந்துஉள்ளது. இது, டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் பொங்கல் பண்டிகைக்கு டாஸ்மாக் சரக்கு விற்பனை, 370 கோடி ரூபாய் முதல், 400 கோடி ரூபாய் வரை, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட, "குடி'மகன்கள் அதிகளவில் விரும்பும் சரக்குகள், போதிய அளவு கடைகளில், "ஸ்டாக்' வைக்கவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மதுபான தொழிற்சாலைகளுக்கும் கூடுதலாக சரக்கு சப்ளை ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|