பதிவு செய்த நாள்
04 ஜன2013
00:46
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், செப்டம்பருடன் நிறைவடைந்த, முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் செயற்கை ரப்பர் பயன்பாடு, 2.26 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட பயன்பாட்டை (2.13 லட்சம் டன்) விட, 6 சதவீதம் அதிகம் என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், செயற்கை ரப்பர் உற்பத்தி, 54,750 டன்னிலிருந்து, 54,778 டன்னாக சற்று உயர்ந்துள்ளது. உற்பத்தி அதிகரித்ததை தொடர்ந்து, இதன் இறக்குமதி, 3 சதவீதம் குறைந்து, 1.75 லட்சம் டன்னிலிருந்து, 1.69 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
மோட்டார் வாகன துறைக்கான செயற்கை ரப்பர் பயன்பாடு, 8 சதவீதம் அதிகரித்து, 1.55 லட்சம் டன்னிலிருந்து, 1.67 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.சென்ற செப்டம்பர் மாதத்தில், செயற்கை ரப்பர் உற்பத்தி, 7,934 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில், 8,421 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. உற்பத்தி குறைந்ததை அடுத்து, இதன் இறக்குமதி, 26,760 டன்னிலிருந்து, 31,265 டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
செயற்கை ரப்பர் பயன்பாடு, 33,510 டன்னிலிருந்து, 37,150 டன்னாக அதிகரித்துள்ளது. இதில், மோட்டார் வாகன டயர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பு, 27,535 டன்னாகும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|