பதிவு செய்த நாள்
04 ஜன2013
00:50
மும்பை:சென்ற டிசம்பர் மாதம் வரையிலுமாக, நாட்டின் பருத்தி வரத்து, 88 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) குறைந்துள்ளது. இது, கடந்த பருவத்தின், இதே காலத்தை (ஒரு கோடி பொதிகள்) விட, 12 சதவீதம் குறைவாகும் என, இந்திய பருத்தி கழகம் தெரிவித்துள்ளது.உள்நாட்டில், பருத்தி உற்பத்தியில், குஜராத் மாநிலத் தின் பங்களிப்பு, அதிக அளவில் உள்ளது. குறைவான மற்றும் தாமதமான மழைப் பொழிவால், இம்மாநிலத்தின் பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நடப்பு பருவத்தில், குஜராத்தின் பருத்தி உற்பத்தி, 4 கோடி பொதிகளாக குறையும் என, எதிர்பார்க் கப்படுகிறது.இதுபோன்ற காரணங்களால், நடப்பு பருவத்தில், ஒட்டுமொத்த அளவில், நாட்டின் பருத்தி உற்பத்தி குறையும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.இதன் விளைவாக, பருத்தி வரத்தும் சரிவடைந்து உள்ளது.கடந்த டிசம்பர் மாதம் வரையிலுமாக, குஜராத் மாநிலத்தின் பருத்தி வரத்து, 19.40 லட்சம் பொதிகளாக குறைந்து உள்ளது. இது, 2011ம் ஆண்டின், இதே மாதத்தில், 33.20 லட்சம் பொதிகளாக இருந்தது.
மதிப்பீட்டு காலத்தில், பஞ்சாப் மாநிலத்தின் பருத்தி வரத்து, 8.19 லட்சம் பொதிகளிலிருந்து, 6.83 லட்சம் பொதி களாக குறைந்துள்ளது. இதையடுத்து, மத்திய பிரதேசத்தின் பருத்தி வரத்து, 7 லட்சம் பொதிகள் என்ற அளவி லிருந்து, 5.15 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|