பதிவு செய்த நாள்
04 ஜன2013
00:52
புதுடில்லி:வரும் 2014ம் ஆண்டில், இந்தியாவில், அலைபேசி வாயிலாக, இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 13 கோடியாக அதிகரிக்கும் என, இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி பயன்படுத்துவோர் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.உள்நாட்டில், கம்ப்யூட்டர், லேப்-டாப், டேப்லெட், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், இச்சாதனங்கள் வாயிலாக, இணைதளத்தை பயன் படுத்து வோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, மற்ற சாதனங்களை காட்டிலும், அலைபேசி வாயிலாக இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அலைபேசி இணையதளம் வாயிலாக, தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, இ-மெயில், சாட், டிக்கெட் முன்பதிவு, சமூகவலைதளம், வங்கிச் சேவை போன்றவை மேற்கொள்ளப் படுகின்றன.அலைபேசி இணையதளத்தை பயன்படுத்தி,"வீடியோகேம்ஸ்' விளையாடுவோர் எண்ணிக்கை, 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது. செய்திகள், படங்கள் பார்ப்போர் எண்ணிக்கை, 30 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.அலைபேசி வாயிலான இணையதள சேவைக்கு, மாதந்தோறும் ஒருவர் சராசரியாக, 198 ரூபாய் செலவிடுவதாக, இக்கூட்டமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியாவில், அலைபேசி வாயிலாக, இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 8.71 கோடி என்ற அளவில் உள்ளது. இது, வரும் 2014ம் ஆண்டில், 50 சதவீதம் உயர்ந்து, 13 கோடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|