அலைபேசி வாயிலான இணையதளபயன்பாடு 13 கோடியாக அதிகரிக்கும்அலைபேசி வாயிலான இணையதளபயன்பாடு 13 கோடியாக அதிகரிக்கும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு ...
மக்களிடம் வசூலிக்கும் சேவை வரியை அரசுக்கு செலுத்த தவறினால் சிறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
00:54

மும்பை:நுகர்வோரிடம் வசூலிக்கும் சேவை வரியை, அரசுக்கு செலுத்தாமல் ஏய்க்கும் வணிகர்கள், சிறைத் தண்டனைக்கு உள்ளாவர் என, மத்திய வருவாய் துறை செயலர் சுமித் போஸ் எச்சரித்து உள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், மறைமுக வரி வாயிலாக, 5.05 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், உற்பத்தி வரி, 1.87 லட்சம் கோடி ரூபாயும், சுங்க வரி, 1.93 லட்சம் கோடி ரூபாயும், சேவை வரி, 1.24 லட்சம் கோடி ரூபாயும் அடங்கும்.
மறைமுக வரி:சென்ற நவம்பரில், மறைமுக வரி வசூல், 17.2 சதவீத அளவிற்கே வளர்ச்சி கண்டு, 36,081 கோடி ரூபாயாக உள்ளது. இது, ஆண்டு வளர்ச்சி இலக்கான, 27 சதவீதத்தை விட குறைவாகும்.இதையடுத்து, மறைமுக வரி வசூலுக்கு நிர்ணயித்த இலக்கை எட்ட, நிதி அமைச்சகம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.இதன்படி, உற்பத்தி வரி செலுத்த தவறுவோரின் சொத்துக்கள் முடக்கப்படும். அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். "சென்வாட்' சலுகை ரத்து செய்யப் படும். 100 சதவீத அபராதமும், வட்டியும் வசூலிக்கப் படும்.கண்டுபிடிக்கமுடியும்
மத்திய கலால் துறை :ஆய்வாளர்கள் பலர், உற்பத்தி வரி செலுத்தாமல் பொருட்களை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர். பதிவு செய்யாமல் பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. "சென்வாட்' சலுகை தவறாக பயன்படுத்தி, வரி ஏய்ப்பு செய்கின்றனர்.தற்போது, அனைத்து வகையான வர்த்தக செயல் பாடு களும், நிதி பரிவர்த்தனைகளும், மின்னணு முறையில் நடைபெறுவதால், அவை குறித்த தகவல்களை உடனுக் குடன் அறிந்து கொள்ள முடிகிறது.அதனால், அதிகாரிகளால், வரி ஏய்ப்பு செய்வோர் குறித்த தகவலை திரட்டி, அவர்கள் வீட்டுக் கதவை சுலபமாக தட்ட முடியும்.சேவை வரியை பொறுத்தவரை, ஏராளமானோர் அரசை ஏமாற்றி வருகின்றனர். நுகர்வோரிடம் சேவை வரி என்று கூறி வசூலிக்கும் தொகையை, அரசுக்கு செலுத்தாமல், தாங்களே எடுத்துக் கொள்கின்றனர். இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறேன்.
அவர்கள், செலுத்த வேண்டிய சேவை வரியை, வட்டி மற்றும் அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும். அது மட்டுமின்றி, வரி ஏய்ப்பு செய்த தொகைக்கு நிகரான தொகையை கட்ட வேண்டும். இத்தகைய தவறுகளுக்கு அவர்கள் மீது சட்டப்படி, நடவடிக்கையும் எடுக்கப்படும்.
முறைகேடு:சேவை சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், 50 சதவீதத் திற் கும் மேலானவை, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமல் உள்ளன.அது போன்று,சேவை வரி செலுத்த வேண்டிய ஏராளமான நிறுவனங்கள், இன்னும் பதிவு செய்து கொள்ளாமல் உள்ளன.ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் நிறுவனங்கள் மீதும், பல்வேறு புகார்கள் உள்ளன.ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், பொருட்களின் மதிப்பை குறைத்தும், கூட்டியும் காட்டுகின்றனர், பொருட்கள் குறித்து தவறான தகவல்களை அளிக்கின்றனர்.
கண்காணிப்பு:இத்தகைய வர்த்தகர்கள், வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்கியுள்ளனர். அத்தகையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இத்தகைய நடவடிக்கைகளுக்கு தடை கோரி ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தாலும், அவரிடம் வரி வசூலை தீவிரமாக மேற்கொள்ளுமாறு வரித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு சுமித் போஸ் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)