பதிவு செய்த நாள்
04 ஜன2013
09:31
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுது நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1.20 புள்ளிகள் அதிகரித்து 19765.98 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 0.35 புள்ளிகள் குறைந்து 6009.15 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததை அடுத்து, 'சென்செக்ஸ்' 0.26 சதவீதஅதிகரிப்புடனும், 'நிப்டி', 6,000 புள்ளிகளை கடந்தும் முடிவடைந்தன. இந்நிலையில், நடப்பாண்டின் இறுதிக்குள், 'சென்செக்ஸ்', முன் எப்போதும் இல்லாத அளவாக, 21,700 புள்ளிகளை எட்டும் என்ற, எச்.எஸ்.பீ.சி.,யின் மதிப்பீடு வெளியானது.கடந்த, 2008ம் ஆண்டு, ஜன., 10ம் தேதி அன்றுதான், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், சாதனை அளவாக, 21,206.77 புள்ளிகளை எட்டியிருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாகவே காணப்பட்டது..
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|