முன்பேர வர்த்தக சந்தையில் வருவாயை வாரி வழங்கும் வேளாண் பொருட்கள்முன்பேர வர்த்தக சந்தையில் வருவாயை வாரி வழங்கும் வேளாண் பொருட்கள் ... தங்கம் விலையில் மாற்றமில்லை தங்கம் விலையில் மாற்றமில்லை ...
டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் விலை உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2013
09:23

புதுடில்லி: நிதிப்பற்றாக்குறையை குறைக்க, விஜய் கேல்கர் கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், விரைவில், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயரலாம்.நிதிப்பற்றாக்குறையை குறைப்பது தொடர்பாக, ஆலோசனைகள் வழங்குவதற்காக, விஜய் கேல்கர் என்பவர் தலைமையில், கமிட்டி ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் நியமித்தது.இந்த கமிட்டி அளித்த பரிந்துரையில், 'டீசல், சமையல் எரிவாயு உட்பட, எரிபொருட்களுக்கான விலையை உயர்த்த வேண்டும்; டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை, 2014-15ம் நிதியாண்டு துவங்கும் முன், மத்திய அரசு கைவிட வேண்டும். மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்த வேண்டும்' என, தெரிவித்திருந்தது.இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதனால், விரைவில், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயரலாம். இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறுகையில், ''விஜய் கேல்கர் கமிட்டி அளித்த பரிந்துரைகள், யோசனைகளே. அவற்றை பெட்ரோலிய அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அதன் மீது இன்னும் முடிவு எடுக்கவில்லை. மானிய விலையில் வழங்கப்படும், சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஒன்பதாக அதிகரிப்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது,'' என்றார்.டீசல் விலை, கடந்த ஆண்டு செப்டம்பர், 14ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, லிட்டருக்கு, 5.63 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதனால், டில்லியில் லிட்டருக்கு, 47.15 ரூபாய் என்ற அளவில் டீசல் விற்கப்படுகிறது. அதேநேரத்தில், 2011 ஜூன் மாதத்திற்குப் பிறகு, மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை.டீசல் விற்பனையில், லிட்டர் ஒன்றுக்கு, 10.16 ரூபாயும், மண்ணெண்ணெய் விற்பனையில், லிட்டருக்கு, 32.17 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில், சிலிண்டர் ஒன்றுக்கு, 490 ரூபாயும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது இழப்பை சந்தித்து வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)