பதிவு செய்த நாள்
05 ஜன2013
10:38
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் கார் நிறுவனத்துக்கு, மஹாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம், தாலிகான் என்ற இடத்தில், இன்ஜின் தொழிற்சாலை உள்ளது. உலகளவில், முதல் "பவர்டிரைன்' தொழிற்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் என, இரண்டு வகை இன்ஜின்களையும் உற்பத்தி செய்யும் திறன்படைத்த தொழிற்சாலையை தான், "பவர்டிரைன்' தொழிற்சாலை என்று அழைக்கின்றனர். இங்கு, 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்களும், 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களும், உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடந்த, 2010ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்த தொழிற்சாலை துவக்கப்பட்டது. இரண்டே ஆண்டுகளில், ஒரு லட்சம் இன்ஜின்கள் உற்பத்தி என்ற சாதனையை, இந்த தொழிற்சாலை, டிசம்பர், 13ம் தேதி நிகழ்த்தியுள்ளது. இந்த தொழிற்சாலையை நிறுவ, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ரூ.1,150 கோடியை முதலீடு செய்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின், செவர்லே பீட் மற்றும் செவர்லே குரூஸ் ஆகிய மாடல் கார்களுக்கு, இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுதவிர, சமீபத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட செவர்லே செயில் யு- விஏ காருக்கும், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு, செவர்லே செயில் மற்றும் செவர்லே என்ஜாய் மாடல் கார்களை, இந்தியாவில் அறிமுகப்படுத்தவும், இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|