தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... நேரடி வரி வசூல் ரூ.4.28 லட்சம் கோடியாக உயர்வு நேரடி வரி வசூல் ரூ.4.28 லட்சம் கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
திராட்சை, நிலக்கடலை ஏற்றுமதிக்கு புதிய விதிமுறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2013
00:07

புதுடில்லி:ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு, திராட்சை ஏற்றுமதி செய்வோர், இனி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் (அபெடா) பதிவு செய்து கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.அது போன்று, ரஷ்யா நீங்கலாக, இதர நாடுகளுக்கு நிலக்கடலை மற்றும் நிலக்கடலை பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும், இத்தகைய பதிவு அவசியம் என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிலக்கடலையில், "அப்லடாக்சின்' என்ற வேதிப் பொருளின் அளவு குறித்து, ஆய்வகத்தின் சான்றிதழையும் அளிக்க வேண்டும் என, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் ஆணை பிறப்பித்துள்ளது.தற்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே, ஏற்றுமதிக்கான ஒப்பந்த ஆவணங்களை பதிவு செய்வதும், வேதிப் பொருளின் அளவு குறித்த சான்றிதழும் அவசியமாக உள்ளது.
ரஷ்யாவுக்கான நிலக்கடலை மற்றும் நிலக்கடலை பொருட்களுக்கு, அவை ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்பாக, குறிப்பிட்ட ஆய்வகங்கள் சான்றிதழ் அளிக்கின்றன. இந்த நடைமுறை தொடரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய திராட்சைகளில், "குளோரோமெக்வாட்' என்ற ரசாயன பொருள் மிகுதியாக உள்ளதாக கூறி, அவற்றை இறக்குமதி செய்ய ஐரோப்பிய அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
இதனால், திராட்சை ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், திராட்சைகள் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக, மேற்கண்ட ரசாயன கலவையை பயன்படுத்துகின்றனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)