ரயிலில் பால் போக்குவரத்திற்கு சேவை வரியில் இருந்து விலக்குரயிலில் பால் போக்குவரத்திற்கு சேவை வரியில் இருந்து விலக்கு ... விமான பயணிகளிடம் கூடுதலாக வசூலித்ததை திரும்ப தர உத்தரவு விமான பயணிகளிடம் கூடுதலாக வசூலித்ததை திரும்ப தர உத்தரவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகள் மீது வாடிக்கையாளர் புகார் சென்னைக்கு மூன்றாவது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
01:09

மும்பை:சென்ற 2011-12ம் நிதியாண்டில், வங்கிச் சேவை தொடர்பாக, வங்கி குறை தீர்ப்பாயத்தில், புகார் செய்தோர் எண்ணிக்கை, 72,889 ஆக அதிகரித்துஉள்ளது. இதில், 94 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், இத்தீர்ப்பாயத்தில் புகார் அளித்தோர் எண்ணிக்கை, 71,274 ஆக இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிச் சேவைகளில் ஏற்படும் குறைபாடு குறித்து, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிப்பதற்காக, வங்கி குறை தீர்ப்பாயம் அமைக்கப் பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில், இத்தீர்பாயத்தில் புகார் அளித்ததில், டில்லி மற்றும் கான்பூர் நகரங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இதையடுத்து, சென்னை, போபால் ஆகிய நகரங்கள் உள்ளன.மதிப்பீட்டு காலத்தில், பெறப்பட்ட மொத்த புகார்களில், விதிமுறைப்படி நடந்து கொள்ளாத வங்கிகள் குறித்து, 25 சதவீத புகார்கள் பதிவாகியுள்ளன.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக, 21 சதவீதம் அதாவது, 14,492 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில், டெபிட் கார்டுகள் பங்களிப்பு, 9,348 ஆகும்.கடந்த 2010-11ம் நிதியாண்டை காட்டிலும், சென்ற நிதியாண்டில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான புகார்கள், 3 சதவீதம் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வைப்பு கணக்கு தொடர்பாக, 12 சதவீதம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)