பதிவு செய்த நாள்
07 ஜன2013
01:09
மும்பை:சென்ற 2011-12ம் நிதியாண்டில், வங்கிச் சேவை தொடர்பாக, வங்கி குறை தீர்ப்பாயத்தில், புகார் செய்தோர் எண்ணிக்கை, 72,889 ஆக அதிகரித்துஉள்ளது. இதில், 94 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், இத்தீர்ப்பாயத்தில் புகார் அளித்தோர் எண்ணிக்கை, 71,274 ஆக இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிச் சேவைகளில் ஏற்படும் குறைபாடு குறித்து, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிப்பதற்காக, வங்கி குறை தீர்ப்பாயம் அமைக்கப் பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில், இத்தீர்பாயத்தில் புகார் அளித்ததில், டில்லி மற்றும் கான்பூர் நகரங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இதையடுத்து, சென்னை, போபால் ஆகிய நகரங்கள் உள்ளன.மதிப்பீட்டு காலத்தில், பெறப்பட்ட மொத்த புகார்களில், விதிமுறைப்படி நடந்து கொள்ளாத வங்கிகள் குறித்து, 25 சதவீத புகார்கள் பதிவாகியுள்ளன.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக, 21 சதவீதம் அதாவது, 14,492 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில், டெபிட் கார்டுகள் பங்களிப்பு, 9,348 ஆகும்.கடந்த 2010-11ம் நிதியாண்டை காட்டிலும், சென்ற நிதியாண்டில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான புகார்கள், 3 சதவீதம் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வைப்பு கணக்கு தொடர்பாக, 12 சதவீதம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|