பதிவு செய்த நாள்
07 ஜன2013
01:16
ஈரோடு:'வறட்சி நீடித்தால், மஞ்சள் விலை, வீழ்ச்சியில் இருந்து எழுச்சி காணும்' என, ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் தெரிவித்தனர்.மஞ்சள் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாகத் திகழ்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும், 185.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், 701.66 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது.தமிழகத்தில் ஆண்டுதோறும், 33 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், 158.64 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும், ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக திகழ்கிறது.ஈரோடு மாவட்டத்தில் இருந்து, ஈரோடு மஞ்சள் சந்தைக்கு, 60 சதவீத மஞ்சளும், கர்நாடகா, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, வேலூர் போன்ற பகுதிகளில் இருந்து, 40 சதவீத மஞ்சளும் வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் மைசூரு சம்பா, 8ம் நம்பர், 10ம் நம்பர் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம்.
எட்டாம் நம்பர் மஞ்சள் டிசம்பர் மாதத்தில் அறுவடை பணி துவங்கி, ஜனவரி மாதத்தில் சந்தைக்கு வரும்.கர்நாடகா, சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருவண்ணாமலை, வேலூர் பகுதியில் இருந்து, வழக்கமாக பிப்ரவரி, 15ம் தேதிக்கு மேல் புதிய மஞ்சள் வரும். மைசூரு சம்பா, 10ம் நம்பர் ஆகிய ரகங்களின் அறுவடை, பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெறும்.
கடந்த 2011ம் ஆண்டில், மஞ்சள் விலை வரலாறு காணாத வகையில், 13 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதால், தமிழகத்தில் மஞ்சள் சாகுபடியின் பரப்பளவு அதிகரித்தது.மஞ்சள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை வீழ்ச்சி கண்டது.கடந்த ஆண்டு, பருவமழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. இதனால், 30 சதவீத அளவிற்கு மஞ்சள் சாகுபடி குறைந்துள்ளது.இதனால், நடப்பாண்டில், மஞ்சள் விலை உயரும் என்ற நம்பிக்கையில், மஞ்சளை அதிகளவில் வியாபாரிகள் இருப்பு வைத்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|