விமான பயணிகளிடம் கூடுதலாக வசூலித்ததை திரும்ப தர உத்தரவுவிமான பயணிகளிடம் கூடுதலாக வசூலித்ததை திரும்ப தர உத்தரவு ... இரு மாதங்களில் சிமென்ட் விலை 10 சதவீதம் சரிவு இரு மாதங்களில் சிமென்ட் விலை 10 சதவீதம் சரிவு ...
வறட்சியை விரும்பும் மஞ்சள் விவசாயிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
01:16

ஈரோடு:'வறட்சி நீடித்தால், மஞ்சள் விலை, வீழ்ச்சியில் இருந்து எழுச்சி காணும்' என, ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் தெரிவித்தனர்.மஞ்சள் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாகத் திகழ்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும், 185.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், 701.66 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது.தமிழகத்தில் ஆண்டுதோறும், 33 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், 158.64 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும், ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக திகழ்கிறது.ஈரோடு மாவட்டத்தில் இருந்து, ஈரோடு மஞ்சள் சந்தைக்கு, 60 சதவீத மஞ்சளும், கர்நாடகா, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, வேலூர் போன்ற பகுதிகளில் இருந்து, 40 சதவீத மஞ்சளும் வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் மைசூரு சம்பா, 8ம் நம்பர், 10ம் நம்பர் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம்.
எட்டாம் நம்பர் மஞ்சள் டிசம்பர் மாதத்தில் அறுவடை பணி துவங்கி, ஜனவரி மாதத்தில் சந்தைக்கு வரும்.கர்நாடகா, சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருவண்ணாமலை, வேலூர் பகுதியில் இருந்து, வழக்கமாக பிப்ரவரி, 15ம் தேதிக்கு மேல் புதிய மஞ்சள் வரும். மைசூரு சம்பா, 10ம் நம்பர் ஆகிய ரகங்களின் அறுவடை, பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெறும்.
கடந்த 2011ம் ஆண்டில், மஞ்சள் விலை வரலாறு காணாத வகையில், 13 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதால், தமிழகத்தில் மஞ்சள் சாகுபடியின் பரப்பளவு அதிகரித்தது.மஞ்சள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை வீழ்ச்சி கண்டது.கடந்த ஆண்டு, பருவமழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. இதனால், 30 சதவீத அளவிற்கு மஞ்சள் சாகுபடி குறைந்துள்ளது.இதனால், நடப்பாண்டில், மஞ்சள் விலை உயரும் என்ற நம்பிக்கையில், மஞ்சளை அதிகளவில் வியாபாரிகள் இருப்பு வைத்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)