வறட்சியை விரும்பும் மஞ்சள் விவசாயிகள்வறட்சியை விரும்பும் மஞ்சள் விவசாயிகள் ... கரும்பு விளைச்சல் குறைவால் வெல்லம் உற்பத்தி பாதிப்பு? கரும்பு விளைச்சல் குறைவால் வெல்லம் உற்பத்தி பாதிப்பு? ...
இரு மாதங்களில் சிமென்ட் விலை 10 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
01:19

கடந்த இரண்டு மாதங்களில் (சென்ற 2012ம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர்), உள்நாட்டில் ஒரு மூட்டை (50 கிலோ) சிமென்ட் விலை சராசரியாக, 10 சதவீதம் சரிவடைந்து, 270 ரூபாயாக உள்ளது. இது, சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில், 300 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.
மந்த நிலை:சென்ற ஜூலை மாதத்தில், நாட்டில் ஒரு மூட்டை சிமென்ட் விலை, முன் எப்போதும் இல்லாத அளவாக, சராசரியாக, 314 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.இது குறித்து, மும்பையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், கட்டுமான நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் போதிய அளவிற்கு கிடைக்காதது போன்ற காரணங்களால், அக்காலாண்டில், சிமென்டிற்கான தேவை எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்லை.இது தவிர, வட மற்றும் மத்திய மாநிலங்களில், நிலவி வரும் கடும் குளிரும் கட்டுமான நடவடிக்கையை வெகுவாக பாதித்துஉள்ளது. இதனால், சிமென்டிற்கான தேவை குறைந்து, இதன் விலை குறையத் துவங்கியுள்ளது.
இவ்வாறு ஆய்வாளர் கூறினார். சிமென்ட் தேவை சரிவடைந்துள்ளதால், சென்ற நவம்பர் முதல், ஆந்திராவில், இதன் விலை, மூட்டைக்கு, 50 ரூபாய் குறைந்துள்ளது. தற்போது, ஒரு மூட்டை சிமென்ட் விலை, 210-215 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
வீழ்ச்சி:ஏற்கனவே, ஆந்திராவில் சிமென்ட் உற்பத்தி அதிகம் உள்ள நிலையில், வரும் மாதங்களில், புதிய சிமென்ட் ஆலைகள் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இது, சிமென்ட் விலை மேலும் வீழ்ச்சி காண வழிவகுக்கும் என, ஆந்திராவின் சாகர் சிமென்ட் நிறுவனத்தின், செயல் இயக்குனர் ஸ்ரீகாந்த் ரெட்டி தெரிவித்தார்.தற்போதைய நிலையில், கிழக்கு மாநிலங்களில், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 300 ரூபாயாகவும், வட மாநிலங்களில், 245 ரூபாயாகவும், மேற்கு மாநிலங்களில், 270 ரூபாயாகவும் உள்ளன.
உற்பத்தி:குறிப்பாக, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தின் தென்பகுதிகளில், இதன் விலை, 240 ரூபாய் என்ற அளவில் உள்ளது.இந்நிலையில், நடப்பு மாதம் மூன்றாவது வாரம் முதல், சிமென்டிற்கான தேவை அதிகரித்து, இதன் விலை உயர வாய்ப்புள்ளது என, சிமென்ட் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சிமென்ட் உற்பத்தியில், நம் நாடு சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் சிமென்ட் உற்பத்தி திறன், 35 கோடி டன் என்ற அளவில் உள்ளது. - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)