பதிவு செய்த நாள்
07 ஜன2013
15:16
புதுடில்லி: நாட்டில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ரிலையன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமும் ஒன்று. வாடிக்கையாளர்கள் சுலபமாக தங்களது இன்சூரன்ஸ் தொகையை செலுத்த, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஆன்-லைன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றனர். இந்தநிலையில் மொபைல் போன் மூலம் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தும் புதிய முறையை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது. எம்.பி.ஒ.எஸ் எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களது இன்சூரன்ஸ் தொகையினை மொபைல் போனிலேயே செலுத்தலாம். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உரிய காலத்திற்குள் இன்சூரன்ஸ் தொகையினை வீட்டில் இருந்தபடியே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவையை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராகேஸ் ஜெயின் கூறுகையில், வாடிக்கையாளர்கள் தங்களது பிரீமியம் தொகையை சரியான காலத்திற்குள் தாமதம் இன்றி செலுத்தவும், முறைகேடுகளை தவிர்க்கவும் இந்த மொபைல் திட்டம் வழிவகுக்கும். ஜி.பி.ஆர்.எஸ்., வசதியுள்ள அனைத்து போன்களும் மற்றும் தொடுதிரை வசதியுள்ள அனைத்து வகை மொபைல் போன்களிலும் இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|